Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.
Fact: வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும். அச்சம்பவம் உண்மையில் 2016 ஆம் ஆண்டில் நடந்ததாகும்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுள்ள நிலையில் கர்நாடாகாவில் தமிழக லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காத பேருந்தை கர்நாடகாவில் உடைத்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடலைத் தொடங்கினோம்.
இத்தேடலில் நியூஸ் 18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் செப்டம்பர் 13, 2016 அன்று கர்நாடகாவில் தமிழ்நாடு லாரி ஓட்டுநர் தாக்கப்பட்டதாக கூறி இதே வீடியோவை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடியதில் வைரலாகும் வீடியோவில் தாக்குதலுக்கு உள்ளான ஓட்டுநரின் நேர்காணல் செப்டம்பர் 15, 2016 அன்று தந்தி தொலைக்காட்சி யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அதில் அந்நபர் பெயர் சோலைமுத்து என்பதையும், அவர் மதுரை விசாலாட்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதையும் அறிய முடிந்தது.
சோலைமுத்து பேசுகையில், கன்னட அமைப்பினர் அவரை தாக்கி அவரிடமிருந்த பணத்தை பிடுங்கியதாகவும், தமிழக வாகனங்களை கொளுத்தியதாகவும், தன் லாரியை கொளுத்த முற்பட்டபோது அங்கிருந்து தப்பி காவல்நிலையம் சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை தற்போது நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.
Also Read: கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக பரவும் பொய் தகவல்!
காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ பழைய வீடியோ என்பதையும், அச்சம்பவம் உண்மையில் 2016 ஆம் ஆண்டில் நடந்தது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from News 18 Tamilnadu, Dated September 13, 2016
Report from Thanthi TV, Dated September 15, 2016
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)