Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: திமுக ஆட்சியில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட டிஎஸ்பி
Fact: வைரலாகும் நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றதாகும்.
திமுக ஆட்சியில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட டிஎஸ்பி என்று செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“என்னதான் நடக்குது..திமுக ஆட்சியில்” என்றும், “இவங்க தான் அண்ணா யூனிவர்சிட்டி குற்றத்தை கண்டுபிடிக்க போகும் ஸ்காட்லான்ட் யார்ட்” என்றும் இந்த செய்தி பரவுகிறது. மாலைமலர் வெளியிட்ட நியூஸ்கார்டினை மையமாக வைத்து இந்து செய்தி பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஐயப்பன் மாலையை அறுத்து மாணவனை வெளியே தள்ளிய கிறித்தவ பள்ளி; வைரலாகும் வீடியோத்தகவல் உண்மையானதா?
திமுக ஆட்சியில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட டிஎஸ்பி என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தி மாலைமலர் நியூஸ்கார்டுடன் பகிரப்படும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும், இணையதளப்பக்கத்திலும் ஆராய்ந்தோம். அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த நியூஸ்கார்ட் இடம்பெற்றிருந்தாலும் அது எங்கு நடைபெற்றது என்று தெளிவாக இடம்பெற்றிருக்கவில்லை.
தொடர்ந்து, அவர்களுடைய முழுமையான கட்டுரையை ஆராய்ந்தபோது இச்செய்தி இந்தியா-கர்நாடகா என்கிற தலைப்பின் கீழ் இடம்பெற்றிருந்தது. அதில், “கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் துணை காவல் கண்காணிப்பாளர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று இந்த செய்தி இடம்பெற்றிருந்தது.
மேலும், இச்செய்தி குறித்து ஆராய்ந்தபோது கர்நாடகா மதுகிரி டிஎஸ்பியான ராமச்சந்திரப்பா புகார் அளிக்க வந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வீடியோ வைரலாகிய நிலையில் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார் என்று TV9 Kannada, Hindustan Times உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட செய்தியே தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெற்றதாகப் பரவி வருகிறது.
Also Read: புதுப்பேட்டை பட பாணியில் பின்புறம் நின்ற பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் என்று பரவும் வீடியோ உண்மையா?
திமுக ஆட்சியில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட டிஎஸ்பி என்று பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report From, Malaimalar, Dated January 04, 2025
YouTube Video From, TV9 Kannada, Dated January 03, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 20, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 18, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 17, 2025