வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkநாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்தாரா?

நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல்

120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக கூறி, அவர்களை ஏமாற்றி, ஆபாச புகைப்படங்களை எடுத்து, அவற்றை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்கிற காசி கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது இவரது தந்தை தங்கப்பாண்டியன் பாஜகவில் இணைந்ததாகவும், அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட கலாச்சார அணியின் துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டதாகவும் கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் - 01

Twitter Link | Archive Link

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் - 02

Facebook Link

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் - 03

Facebook Link

Also Read: ஷ்யாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை அறிய முடிந்தது. கன்னியாகுமரி மாவட்ட பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதை தெளிவு செய்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இத்தகவலானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என்பதை அறிய, தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இதில்.  “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமின்.  நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு” என்று தலைப்பிட்டு தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

காசிக்கு ஆதரவாக ஆதாரங்களை அழித்த குற்றத்திற்காக, அவனது தந்தை தங்கபாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை நேற்றைய முன்தினம் ( ஆகஸ்ட் 24) மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்திருந்தது. இதுக்குறித்து ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்

தங்கபாண்டியன் ஜாமீன் குறித்து தந்தி தொலைக்காட்சியில் வந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், அவரும்‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்பதை உறுதி செய்தார்.

Also Read: அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்தாரா?

Conclusion

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

Kanniyakumar BJP’s Tweet, tweeted on 26/08/2022
Phone Conversation with Vinoth, Thanthi TV, on 26/08/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular