வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkஅமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்தாரா?

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்ததாக பரவும் புகைப்படம்

இப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்ததாக பரவும் புகைப்படம் - 01

Twitter Link | Archive Link

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்ததாக பரவும் புகைப்படம் - 02

Facebook Link

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்ததாக பரவும் புகைப்படம் - 03

Facebook Link

Also Read: ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று சீமான் பேசினாரா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அதில் வைரலாகும் கேலிச் சித்திரம் கடந்த கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிந்தது.

இதனையடுத்து உண்மையிலேயே பென் காரிஸ்ஸன் இவ்வாறு ஒரு கேலிச் சித்திரத்தை வரைந்தாரா என்பதை உறுதி செய்ய அவரது அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் கேலிச் சித்திரம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது. காரிஸ்ஸன் ஹிலாரி கிளின்டனை விமர்சித்து 2016 ஆம் ஆண்டு கேலிச் சித்திரம் ஒன்றை வரைந்துள்ளார். அந்த படத்தை எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான கேலிச் சித்திரத்தையும், எடிட் செய்யப்பட்ட கேலிச் சித்திரத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

comparison

Also Read: ஷ்யாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?

Conclusion

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்ததாக  பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources

A Facebook post from grrrgraphic.com dated on 08/03/2016


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular