Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று ராஜீவ்காந்தி கூறினார்.
Fact: வைரலாகும் ஜூனியர் விகடன் அட்டைப்படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். உண்மையில் ராஜீவ்காந்தி தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் என்று நிர்மலா சீதாராமனையே கூறினார்.
திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் என்று குறிப்பிட்டதாக ஜூனியர் விகடனின் அட்டைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றாரா அண்ணாமலை?
தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று ராஜீவ்காந்தி கூறியதாக ஜூனியர் விகடனின் அட்டைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து ஜூனியர் விகடனில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என தேடினோம்.
இத்தேடலில் “இந்தியாவின் பேரிடர் மோடி… தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!” – வெளுத்து வாங்கும் இராஜீவ் காந்தி” என்று தலைப்பிட்டு ஜூனியர் விகடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து விகடன் ஆசிரியர்களுள் ஒருவரான ஐ.பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் அட்டைப்படம் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் அட்டைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என தெளிவு செய்தார். கூடவே உண்மையான அட்டைப்படத்தையும் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.
தொடர்ந்து தேடுகையில் ராஜீவ்காந்தியும் அவரது எக்ஸ் பக்கத்தில் ஜூனியர் விகடனின் உண்மையான அட்டைப்படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
கூடவே ஜூனியர் விகடனுக்கு அவர் கொடுத்த நேர்காணலையும் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது எனவும், உண்மையில் ராஜீவ்காந்தி தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையே கூறினார் எனவும் தெளிவாகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான அட்டைப்படத்தையும், எடிட் செய்யப்பட்ட போலி அட்டைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
Also Read: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிவாரண நிதி எங்கே என்று கேட்டனரா தூத்துக்குடி மக்கள்?
தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று ராஜீவ்காந்தி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Vikatan, Dated December 27, 2023
Phone Conversation with I. Britto, Editor, Vikatan
X post from Rajivgandhi, President, Student Wing, DMK, Dated December 27, 2023
X post from Rajivgandhi, President, Student Wing, DMK, Dated December 27, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 3, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 26, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025