Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன் எனும் வரிகளுடன் திமுக சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்கிற வரிகளுடனே பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ‘தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்’ எனும் வரிகளுடன் பதாகை வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அந்த நியூஸ்கார்டில் ‘தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்’ என்கிற வரிகளுடன் திமுக தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகையின் படமும் இடம்பெற்றிருந்தது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெகவில் திரிஷாவுக்கு முக்கிய பொறுப்பு.. ஜூனியர் விகடன் செய்தி படம் வெளியிட்டதா?
தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்’ எனும் வரிகளுடன் திமுக சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
அத்தேடலில் தமிழ்நாடு முழுவதும் “தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்” என்கிற உறுதிமொழி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பதாகை முன்பு Selfie எடுத்து #ஓரணியில்தமிழ்நாடு எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தி @DMKITwing டேக் செய்து பதிவிடுவோர்களை தேர்ந்தெடுத்து டீ- ஷர்ட் வழங்கப்படும் என்றும் திமுக ஐடி விங் சார்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இப்பதிவுடன் வைரலாகும் நியூஸ்கார்டில் இடம்பெற்றிருந்த அதே பதாகையின் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அப்பதாகையில் தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன் எனும் வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை; தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்கிற வாசகமே இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் சன் நியூஸின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம்.
இத்தேடலில் சன் நியூஸ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக “‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற வரிகளுடன் மதுரையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.


இதனையடுத்து சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: பெரியாருடன் விஜய் நிற்கும் சிலை; வைரலாகும் படம் உண்மையானதா?
‘தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்’ எனும் வரிகளுடன் திமுக சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post by DMK IT Wing, dated September 15, 2025
Instagram Post by Sun News, dated September 14, 2025
Phone Conversation With Manoj, Sun News
Vijayalakshmi Balasubramaniyan
September 26, 2025
Ramkumar Kaliamurthy
September 17, 2025
Ramkumar Kaliamurthy
September 8, 2025