Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தான் ஒரு கிறிஸ்துவர் என்று பெருமையாக பேசிய உதயநிதி ஸ்டாலின்
Fact: வைரலாகும் வீடியோவில் அவர் பேசிய ஒரு பகுதி மட்டும் மதரீதியான அவதூறை பரப்பும் வகையில் பரப்பப்படுகிறது.
உதயநிதி தன்னை கிறிஸ்தவர் என்று பெருமையாக கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“நான் ஒரு கிறிஸ்டியன்..! உதயநிதி பெருமிதம் எங்கு பார்த்தாலும் நட்சத்திரம் ஜொலிக்கிறது..! ஒட்டு மொத்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய விழா கிறிஸ்துமஸ் தான்.. இந்த விழானா எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.. சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் நிகழ்சியிலேயே சொன்னேன் நானும் கிறிஸ்டியன் தான் என்று.. இன்று மீண்டும் சொல்கிறேன்.. பெருமையோடு சொல்கிறேன்.. நானும் ஒரு கிறிஸ்டியன் தான்.. உதயநிதி பேச்சு” என்று பாலிமர் டிவி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?
உதயநிதி தன்னை கிறிஸ்தவர் என்று பெருமையாக கூறியதாக பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
கோவையில் சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,
”சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நானும் ஒரு கிறிஸ்தவன்தான் என்று பெருமையாக சொன்னேன். உடனே உங்களுக்கு தெரியும் சங்கிகள் பலருக்கும் பயங்கர வயிற்றெரிச்சல். நான் இன்றைக்கு மீண்டும் உங்கள் முன்னால் சொல்கிறேன். அதை சொல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு கிறிஸ்தவன்தான்.
நீங்கள் என்னை கிறிஸ்டியன் என்று நினைத்தால் நான் கிறிஸ்டியன்; நீங்கள் என்னை முஸ்லீம் என்று நினைத்தான் நான் முஸ்லீம்; நீங்கள் என்னை இந்து என்று நினைத்தால் நான் இந்து. ஏனென்றால், நான் அனைவருக்கும் பொதுவானவன். எப்பொழுதுமே அப்படித்தான் இருப்போம். எல்லா மதங்களுக்கும் அடிப்படையே அன்புதான். எல்லார் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதைத்தான் எல்லா மதங்களும் சொல்லித் தருகின்றன. ஆனால், அதே மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்கள்தான் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவார்கள்.
வெறுப்பை பரப்பக்கூடியவர்கள் என்றுமே உண்மை பேசமாட்டார்கள். உண்மையை பேசி வெறுப்பை பரப்ப முடியாது. அதனால்தான், அவர்கள் தொடர்ந்து பொய்யையே நம்பி, பொய்யை மட்டுமே பரப்புகிறார்கள். காலையில் எழுந்து சமூக வலைத்தளத்தில் பொய்யை பரப்ப ஆரம்பித்தார்கள் என்றால் இரவு தூங்கும் வரை பொய்யை பரப்புவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்.”
என்று பேசியிருந்தார்.
குறிப்பிட்ட வீடியோவில் அவர் கிறிஸ்துவன் என்று பெருமை கொள்கிறேன் என்று கூறிய வாக்கியத்தை மட்டும் மத ரீதியாக அவதூறு பரப்பும் வகையில் கத்தரித்து பரப்பி வருகின்றனர் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
Also Read: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?
உதயநிதி தன்னை கிறிஸ்தவர் என்று பெருமையாக கூறியதாக பரவும் செய்தி திரித்து பரப்பப்படுகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video from Sun News Tamil, Dated December 18, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 27, 2025