திங்கட்கிழமை, அக்டோபர் 28, 2024
திங்கட்கிழமை, அக்டோபர் 28, 2024

HomeFact Checkஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்ததா?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது.

Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூட்டிய  பிறகு முதன்முதலாக அவரது உருவப் படத்தை திறந்த நிகழ்வின் வீடியோவை எடிட் செய்தே அவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது. இதற்கான பெரிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது.

X Link | Archive Link

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது.

Archive Link

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரபாகரன் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பவர்களை ஒற்றைப் பனைமரம் அம்பலப்படுத்தும்… வைரலாகும் நியூஸ்கார்டுகள் உண்மையானதா?

Fact Check/Verification

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்ததாக பரப்பப்படும் வீடியோவில் இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் புகைப்படத்தை திறக்க, சுற்றி இருந்தவர்கள் கைத்தட்டுவதை கேட்க முடிந்தது. மேலும் நெதன்யாகுவை தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ள போஸ்டரை சுற்றி, புகைப்படம் அல்லது ஒவியங்களுக்கு போடப்படும் சட்டம் இருப்பதை காண முடிந்தது.

இவையெல்லாம் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிச்சூட்டிய பிறகு தனது முதல் அதிகாரப்பூர்வ உருவப்படத்தை வெளியிட்டதாக கூறி அசோசியேட்டட் பிரஸ் வைரலாகும் இவ்வீடியோவை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இவ்வீடியோவில் மூன்றாம் சார்லஸ் அவரது படத்தையே திறந்தார்; இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படத்தை அல்ல.

தொடர்ந்து தேடுகையில் இங்கிலாந்து அரண்மனையின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கமான ‘The Royal Family Channel’ யூடியூப் பக்கத்திலும் இந்நிகழ்வு குறித்த வீடியோ வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது உறுதியாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான வீடியோவின் காட்சியையும், எடிட் செய்யப்பட்ட வீடியோவின் காட்சியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது.

Also Read: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசினாரா ஆர்.பி.உதயகுமார்?

Conclusion

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்ததாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூட்டிய  பிறகு முதன்முதலாக அவரது அதிகாரப்பூர்வ உருவப் படத்தை திறந்த நிகழ்வின் வீடியோவை எடிட் செய்தே அவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
YouTube video from Associated Press, Dated May 15, 2024
YouTube video from The Royal Family Channel, Dated May 14, 2024


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular