வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkநான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

“நானோ என் குடும்பத்தாரோ, என்னைச் சேர்ந்தவர்களோ இரயிலில் பயணித்ததே இல்லை; விமானப் பயணங்களை மட்டுமே மேற்கொள்கிறோம். அதனால் ஒடிசா இரயில் விபத்து என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகநியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
Screenshot from Facebook/Svr Rajah

Archived Link

நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
Screenshot from Facebook/muruga.saravanan.7

Archived Link

நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
Screenshot from Facebook/சாமி அறிவழகன்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

Fact Check/Verification

நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அந்த நியூஸ்கார்ட் போலியானது என அவர் தெரிவித்தார்.

வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று உறுதியாகிய நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து நிர்மலா சீதாராமன் ஏதேனும் கூறியுள்ளாரா என்று ஆராய்ந்தோம்.

இதில் விபத்து நடந்த வெள்ளிக்கிழமையன்று (02/06/2023) இரவு 10:23-க்கு, ஒடிசா ரயில் விபத்து குறித்த செய்தி என்னை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இந்த விபத்தில் அனைவரும் மீட்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் டிவீட் ஒன்றை பதிவு செய்துள்ளதை காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில் நிர்மலா சீதாராமன் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது.

Also Read: தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறினாரா?

Conclusion

நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With Ivani, Digital Head, Puthiya Thalaimurai, Dated June 06, 2023

Tweet from Nirmala Sitharaman, Dated June 02, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular