Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: சென்னை மழையில் வலம் வரும் முதலை புகைப்படம்
Fact: இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய, 2021 ஆம் ஆண்டின் பழைய படமாகும். மேலும், இப்புகைப்படம் தமிழகத்தைச் சேர்ந்தது அல்ல.
சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“இந்த முதலை சாதுவானது. கூச்ச சுபாவம் கொண்டது. அதன் வாயில் எதையாவது வைத்தால் கடிக்கக் கூட தெரியாது. எனவே பொதுமக்கள் ஜீவ காருண்யத்துடன் நடந்து கொண்டு, முதலைக் கறிக்கு ஆசைப்பட்டு விடாமல், ஈர உணர்வுடன் நடந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!
சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கிய போது அப்புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்தே பரவி வருகிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது. தொடர்ந்து, அப்புகைப்படம் குறித்து ஆராய்ந்தபோது வைரலாகும் புகைப்படம் தாய்லாந்தில் எடுக்கப்பட்டது என்று கடந்த செப்டம்பர் 2021ல் இணையத்தில் பரவலாக பதிவாகியிருந்தது.
மேலும், Just Mike என்கிற எக்ஸ் தளத்தில் இப்புகைப்படத்துடன் கூடவே இளைஞர் ஒருவர் அம்முதலையை கயிறால் பிணைத்திருப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அவருடைய தோற்றம் தமிழகத்திற்கு ஒத்துப்போகவில்லை.
இந்த புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வைரலாகப் பரவியபொழுதே இதுகுறித்த உண்மைச்சோதனையை நாம் வெளியிட்டுள்ளோம்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையே மழையில் தத்தளித்து வருகின்ற நிலையில் முதலை ஒன்று சாலையைக் கடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த தமிழக வனத்துறை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு, மழை வெள்ளத்தால் அந்த முதலை வெளிவந்ததாகவும் அதனால் அபாயம் எதுவும் இல்லை என்று X பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் பழைய வீடியோ!
சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு முதலே பரவி வருகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X Post from Just Mike, Dated July 29, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)