வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkமழைநீரில் முதலை வந்ததாக வதந்தி

மழைநீரில் முதலை வந்ததாக வதந்தி

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தமிழகத்தில் மழைநீரில் முதலை வந்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பொழிந்து வருகின்றது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், “திமுகவுக்கு ஓட்டு போட்டா, வீடு தேடி முதல்வர் வருவாருன்னு சொன்னாங்க. முதலை வருமுன்னு சொல்லவே இல்லையே” என்று கூறி மழைநீரில் முதலை வந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் மழைநீரில் முதலை வந்ததாக பரவும் தகவல் - 1

Facebook Link

தமிழகத்தில் மழைநீரில் முதலை வந்ததாக பரவும் தகவல் - 2

Facebook Link

தமிழகத்தில் மழைநீரில் முதலை வந்ததாக பரவும் தகவல் - 3

Facebook Link

Also Read: மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றாரா வேலூர் இப்ராஹிம்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

தமிழகத்தில் மழைநீரில் முதலை வந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இதில் இப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே தாய்லாந்தில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் பரவி வருவதை காண முடிந்தது.

தமிழகத்தில் மழைநீரில் முதலை வந்ததாக பரவும் தகவலின் உண்மைத்தன்மை

Archive Link

Also Read: பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ‘மத்திய அரசு’ என்று நிதி பெறுவதற்காக குறிப்பிட்டாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

உண்மையில் இப்படம் எப்போது, எவ்விடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்படம் கண்டிப்பாக சமீபத்தில் தமிழகத்தில் பெய்த மழையில் எடுக்கப்பட்டதல்ல என்பது மட்டும் நம்மால் தெளிவாக உணர முடிந்தது.

Conclusion

தமிழகத்தில் மழைநீரில் முதலை வந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

9gag.com

Twitter



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular