Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பிரபாகரன் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் சிலரை ஒற்றைப் பனைமரம் அம்பலப்படுத்தும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநர் புதியவன் ராசையா கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவை. புதிய தலைமுறை தரப்பும், நியூஸ் 7 தமிழ் தரப்பும் இதை தெளிவு செய்துள்ளது.
“இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது ஒற்றைப் பனைமரம். இப்படத்தில் மாவீரன் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் சிலரையும் அம்பலப்படுத்தியுள்ளோம்” என்று ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தின் இயக்குநர் புதியவன் ராசையா கூறியதாக நியூஸ்கார்டுகள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று கூறினாரா ஆளுநர்?
பிரபாகரன் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் சிலரை ஒற்றைப் பனைமரம் அம்பலப்படுத்தும் என்று ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தின் இயக்குநர் புதியவன் ராசையா கூறியதாக நியூஸ்கார்டுகள் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
நம் தேடலில் இயக்குநர் புதியவன் ராசையா நேற்றைய முன்தினம் (அக்டோபர் 22) பத்திரிக்கையாளகளை சந்தித்த வீடியோ ஒன்று நியூஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. இச்சந்திப்பில் எந்த ஒரு தருணத்தில் வைரலாகும் நியூஸ்கார்டுகளில் குறிப்பிட்டுள்ள கருத்தை அவர் பேசி இருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டுகள் புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்ததால், இந்நிறுவனங்கள் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அவற்றின் சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தோம்.
அதில் இந்த நியூஸ்கார்டுகளை இந்நிறுவனங்கள் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
எனவே, நியூஸ் 7 தமிழ் ஆசிரியர் சுகிதா சாரங்கராஜை தொடர்பு கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று தெளிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும் ”வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று பதிவிடப்பட்டது.
இதனையடுத்து புதிய தலைமுறை டிஜிட்டல் தலைவர் இவானியைத் தொடர்புக் கொண்டு புதிய தலைமுறை நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவரும் ‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறை இணையத்தளத்திலும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

Also Read: இடியும் நிலையில் உள்ள ஓங்கூர் ஆற்றுப்பாலம்… வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை!
பிரபாகரன் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் சிலரை ஒற்றைப் பனைமரம் அம்பலப்படுத்தும் என்று ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தின் இயக்குநர் புதியவன் ராசையா கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Phone Conversation With Sugitha Sarangaraj, Editor, News 7 Tamil
Twitter Post From News 7 Tamil, Dated October 24, 2022
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Report fom Puthiya Thalaimurai
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்