Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ₹500 நோட்டுகள் பாகிஸ்தானில் இருந்ததாக பரவும் வீடியோ.
இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவிலிருக்கும் சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இச்சம்பவம் உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் நடந்துள்ளது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ₹500 நோட்டுகள் பாகிஸ்தானில் இருந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
“பாகிஸ்தானில் இந்தியாவின் பழைய 500 ரூபாய் நோட்டு (பழைய பேப்பர் வாங்கும் தள்ளுவண்டியில் ) நம் பிரதமர் ஏன் பணமதிப்பிழப்பு செய்தார் என்று இப்போ புரியும்னு நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டு இவ்வீடியோ பரப்பப்படுகின்றது.
அவ்வீடியோவில் இரண்டு சிறுவர்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகளை கட்டுக் கட்டாக வைத்திருப்பதாக இருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திருச்சி பரப்புரையில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடலை பாடினாரா விஜய்?
இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ₹500 நோட்டுகள் பாகிஸ்தானில் இருந்ததாக பரவும் வீடியோவின் உண்மையை அறிய அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் அக்கி மிஷ்ரா என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 27, 2024 அன்று வைரலாகும் இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் இவ்வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து எவ்வித தகவலும் அப்பதிவில் இடம்பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து தேடுகையில் பிரிஜேஷ் மிஷ்ரா என்பவர் அவரின் இஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் வீடியோ குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் அச்சிறுவர்களுடன் பேசுபவர் அவர்தான் என்றும், அவ்வீடியோவை தன் மச்சானின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அவ்வீடியோவில் காணப்படும் சிறுவர்களை சந்திக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து தேடுகையில் மற்றொரு வீடியோவை பிரிஜேஷ் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சிறுவனின் தாயை சந்தித்தாக அவர் தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பொய்தகவல் பரவி வருகின்றது. அச்சிறுவர்கள் பாகிஸ்தானை சார்ந்தவர்களோ, உத்தரக்காண்டை சார்ந்தவர்களோ அல்ல. அவர்கள் அசாமை சார்ந்தவர்கள். தற்போது லக்கோவில் வசித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தேடுகையில் பிரிஜேஷ் அவரது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அதில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாய் இடம்பெற்றிருந்தனர்.
அவ்வீடியோலும் வைரலாகும் சம்பவம் லக்னோவில் நடந்தது என்பதை அவர் உறுதிப்படுத்தி இருந்தார்.
Also Read: ‘பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்’.. உண்மையை கூறிய ஸ்டாலின் என்று பரவும் வீடியோ உண்மையானதா?
இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ₹500 நோட்டுகள் பாகிஸ்தானில் இருந்ததாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவிலிருக்கும் சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இச்சம்பவம் உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் நடந்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இதே தகவல் நியூஸ்செக்கர் மலையாளத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
Sources
Instagram Video by @akhimishra511, dated December 27, 2024
Instagram Video by @brijeshmishra809gonda, dated January 1, 2025
Instagram Video by @brijeshmishra809gonda, dated January 2, 2025
Instagram Video by pandit Brijesh Mishra Gonda up43, dated January 2, 2025
Vijayalakshmi Balasubramaniyan
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Vasudha Beri
November 21, 2025