வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact CheckPoliticsகன்றுக்குட்டியின் மேல் உதயசூரியன்; தமிழகத்தில் நடந்ததா?

கன்றுக்குட்டியின் மேல் உதயசூரியன்; தமிழகத்தில் நடந்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான சி.டி.ஆர்.நிர்மல்குமார் கன்றுக்குட்டியின் மேல் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தை சூடு போட்டதாக கூறி புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கன்றுக்குட்டியின் மேல் உதயசூரியன் சின்னம் வரைந்தது குறித்து பரவும் பதிவு -

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகமே பரப்பரப்பாக உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கும், வதந்திகளுக்கும் எப்போதுமே  பஞ்சமிருக்காது.

அதேபோல் இந்த தேர்தலிலும் பல வதந்திகள் வந்தவண்ணம் உள்ளது. ஒவ்வொரு கட்சியைச் சார்ந்த அரசியல் தலைவர்களும், அவர்களின் அபிமானிகளும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை மற்றொரு கட்சியைச் சார்ந்தவர்கள் மீது சுமத்தி வருகின்றனர்.

இந்த வரிசையில் தமிழக பாஜகவின் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்கள், இவர்களின் கூட்டணிக் கட்சிகளின் எதிர்க்கட்சியான திமுகவினர் ஒரு கன்றுக்குட்டியின் மேல் உதயசூரியன் சின்னத்தை பொறித்ததாகக் கூறி புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Archive Link: https://archive.vn/lxb6L

சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதிவிட்டுள்ள இந்தப் பதிவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

கன்றுக்குட்டியின் மேல் உதயசூரியன் சின்னத்தை வரைந்ததாக சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதிவிட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் அப்படத்தை ஆய்வு செய்தோம்.

நமது ஆய்வில் இந்தப் புகைப்படமானது இதே குற்றச்சாட்டுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே சமூக வலைத்தளங்களில் பரவியதை நம்மால் அறிய முடிந்தது.

Archive Link: https://archive.vn/SESgA

Archive Link:https://archive.vn/cMax7

வைரலாகும் இப்புகைப்படம் உண்மையில் இலங்கை மட்டக்களிப்பில்  எடுக்கப்பட்டது  என்று  தூத்துக்குடி காவலர் பள்ளியின் முதல்வராக இருக்கும் அர்ஜூன் சரவணன் அவர்கள் அச்சமயம் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததையும் நம்மால் காண முடிந்தது.

மேலும் இலங்கையைச் சேர்ந்த செய்தி இணையத்தளங்களான நியூ ஜாஃப்னா, டுடே வாணி, வம்பன்.நெட் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் இந்நிகழ்வு இலங்கை மட்டக்களிப்பு வாக்குச்சாவடிக்கு அருகில் நடந்ததாக செய்தி வந்திருந்ததை நம்மால் காண முடிந்தது.

மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது, கன்றுக் குட்டியின் மேல் உதயசூரியன் சின்னத்தை குறியிட்ட நிகழ்வு தமிழகத்தில் நடந்தது அல்ல, அது இலங்கையில் நடந்த நிகழ்வு என்பது நமக்கு தெளிவாகிறது.  

கன்றுக்குட்டியின் மேல் பொறிக்கப்பட்ட உதயசூரியன் சின்னம் திமுகவின் உதயசூரியனாக இல்லாதபட்சத்தில், இது எந்த கட்சியின் சின்னம் என்பதை அறிய இதுக்குறித்து தேடினோம்.

இலங்கையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெற்றது. அப்போது இலங்கையின் ஐந்து அமைப்பினர் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினர். இக்கூட்டணியைச் சார்ந்தவர்கள் உதயசூரியன் எனும் பொது சின்னத்தை தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

இதுக்குறித்து அறிவிக்க அவர்கள் பத்திரிக்கையாளர்  சந்தித்தனர். அவ்வீடியோ உங்கள் பார்வைக்காக.

ஆகவே இதன்மூலம் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,

  • கன்றுக்குட்டியின் மேல் உதயசூரியன் சின்னம் பொறித்த நிகழ்வு நடந்தது தமிழகமல்ல, அது இலங்கையின் மட்டக்களிப்பு பகுதியாகும்.
  • கன்றுக்குட்டி மீது பொறித்த உதயசூரியன் சின்னத்திற்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, அது இலங்கையின் தமிழர் ஐக்கிய முன்னணி கூட்டணியின் சின்னமாகும்.

Conclusion

சி.டி.ஆர்.நிர்மல்குமார் கன்றுக்குட்டியின் மேல் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தை சூடு போட்டதாக கூறி பதிவிட்ட புகைப்படம் உண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்டதென்பதையும், அது இலங்கையின் தமிழர் ஐக்கிய முன்னணி கூட்டணியின் சின்னம் என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Mr.Arjun Saravanan: https://twitter.com/ArjunSaravanan5/status/1292468285435412480

Vampan net: https://vampan.net/19916/

Today Vanni: https://todayvanni.com/7066/

New Jaffna: http://newjaffna.com/2020/08/06/16669/

News First: https://www.newsfirst.lk/tamil/2020/02/22/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular