புதன்கிழமை, ஜூலை 3, 2024
புதன்கிழமை, ஜூலை 3, 2024

HomeFact Checkகுற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் தவறான வீடியோ!

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் வீடியோ!

Fact: வைரலாகும் வீடியோ குற்றாலத்தில் எடுக்கப்பட்டதல்ல என வனத்துறை தெரிவித்துள்ளது.

“குற்றாலத்தில் கூட்டம் குறைவாக உள்ள நிலையில், ஐந்தருவியில் கொட்டும் நீரில் அடித்து வரப்பட்ட மீன்களை மலைப்பாம்புகள் பிடித்து இரையாக்குவதும், ஒரு மீனுக்காக இரண்டு பாம்புகள் சண்டையிடுவதும் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்கச் செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் வீடியோத்தகவல்

Archive Link

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் வீடியோத்தகவல்

Archive Link

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் வீடியோத்தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகிறேன் என்றாரா விஜய்?

Fact Check/Verification

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டில் கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவியில் எடுக்கப்பட்டதாக கூறி இவ்வீடியோ யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் வீடியோத்தகவல்

தொடர்ந்து தேடுகையில் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறி இதே வீடியோ 2020 ஜூலையில் மற்றொரு யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் வீடியோத்தகவல்

இதனையடுத்து தேடுகையில் இவ்வீடியோ குற்றாலத்தில் எடுக்கப்பட்டதல்ல என வனத்துறை விளக்கமளித்துள்ளதாக தமிழ்நாடு தகவல் சரிப்பார்கம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு வழியாக தெரிவித்துள்ளதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ பல இடங்களில் எடுக்கப்பட்டதாக கூறி கடந்த சில வருடங்களாகவே சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிகின்றது. இவ்வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பதை நம்மால் கண்டறிய முடியவில்லை. ஆனால் இது குற்றாலத்தில் எடுக்கப்பட்டதல்ல என வனத்துறையின் விளக்கம் மூலமாக அறிய முடிகின்றது.

Also Read: ‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று அட்டைப்படம் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

Conclusion

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video Dated August 26, 2018
YouTube Video Dated July 19, 2020

X post from TN Fact Check, Dated June 29, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular