Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: மத்தியப் பிரதேசத்தில் கருத்துக் கேட்க சென்ற பாஜக வேட்பாளர்களை பொது மக்கள் தாக்கினர்.
Fact: தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவமே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
“மத்தியப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்து கேட்கச் சென்றபோது மக்கள் தாக்கியுள்ளனர்”என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.ம் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?
மத்தியப் பிரதேசத்தில் கருத்துக் கேட்க சென்ற பாஜக வேட்பாளர்களை பொது மக்கள் தாக்கியதாக பரவும் வீடியோவில் ஒரு காட்சியில் ‘Jangaon traffic Police’ (ஜாங்காவ்ன் டிராஃபிக் போலீஸ்) என்று எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஜாங்காவ்ன் என்பது தெலங்கானாவில் இருக்கும் ஒரு மாவட்டமாகும்.
அதேபோல் மற்றொரு இடத்தில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பெயர் இடம்பெற்ற பேனர் இடம்பெற்றிருந்ததையும் காண முடிந்தது.
மேலும் கலவரக்காரர்களில் சிலர் கேசிஆர் கட்சியின் பாரத ராஷ்ட்ரிய சமிதியின் நிறமான பிங் நிறத்தில் துண்டு அணிந்திருப்பதையும் காண முடிந்தது.
இவற்றின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோ மத்தியப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதல்ல; தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பதும், பாஜகவினரை தாக்குபவர்கள் பொதுமக்கள் அல்ல; பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சார்ந்தவர்கள் என்பதும் தெளிவாகின்றது.
இதனையடுத்து இச்சம்பவம் எப்போது, எந்த சூழலில் நடந்தது என்பதை அறிய வைரலாகும் வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்ந்தோம்.
அதில் ஒன் இந்தியா நியூஸ் யூடியூப் பக்கத்தில் பிப்ரவரி 11, 2022 அன்று “Telangana Row: TRS and BJP workers clash during Anti-Modi protest in the state” என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருப்பதையும், அவ்வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் அதே காட்சிகள் இடம்பெற்றிருப்பதையும் காண முடிந்தது.
தெலங்கானா தனிமாநிலமாக பிரிய தேர்ந்தெடுத்த வழி ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சென்ற வருடம் பிப்ரவரியில் ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி பேசினார். இதனை தொடர்ந்து பிரதமர் நிபந்தனையில்லாத மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரத் ராஷ்ட்ரிய சமிதியை சார்ந்தவர்கள் தெலங்கானா முழுவதும் போராட்டம் நடத்தினர். இச்சமயத்தில் பாஜகவினருக்கும் பாரத ராஷ்ட்ரிய சமிதியினருக்கும் இடையே பெரிய வன்முறை ஏற்பட்டது.
அந்த வன்முறை சம்பவமே மத்தியப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்களை பொதுமக்கள் தாக்கியதாக திரித்து பரப்பப்பட்டு வருகின்றது.
Also Read: விமான பைலட்கள் போல் அசத்தும் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
மத்தியப் பிரதேசத்தில் கருத்துக் கேட்க சென்ற பாஜக வேட்பாளர்களை பொது மக்கள் தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube Video from One India News, Dated February 10, 2022
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 4, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2025