Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழ்நாட்டு போலீசார் ஒருவரை பெல்ட்டால் கொடூரமாக தாக்கினர்.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை. இச்சம்பவம் உத்திர பிரதேச மாநிலம் ஜான்பூரில் நடந்ததாகும்.
விசாரணை என்ற பெயரில் தமிழ்நாட்டு போலீசார் ஒருவரை பெல்ட்டால் கொடூரமாக தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரவும் எடிட் படம்!
தமிழ்நாட்டு போலீசார் ஒருவரை பெல்ட்டால் கொடூரமாக தாக்கியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பியூஷ் ராய் எனும் ஊடகவியலாளர் வைரலாகும் இதே வீடியோவை பகிர்ந்து, உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூரில் உள்ள முங்ரபாத்சபூர் காவல் நிலையத்தில் வினோத் மிஷ்ரா எனும் போலீஸ் அதிகாரி கொடூரமாக ஒருவரை தாக்கியதாக பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூவ எக்ஸ் பக்கத்திலும் இச்சம்பவம் உத்திரப்பிரதேசத்தின் ஜான்பூரில் நடந்ததாக கூறி இதே வீடியோவை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் நவ்பாரத் டைம்ஸ், ஈடிவி பாரத், அமர் உஜாலா, ஃப்ரீ பிரஸ் ஜர்னல் உள்ளிட்ட ஊடகங்களிலும் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சம்பவம் உத்திரப்பிரதேசத்தின் ஜான்பூரில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய எஸ்.ஹெச்.ஓ வினோத் மிஷ்ராவுடன் அவருக்கு உடந்தையாக இருந்த கான்ஸ்டபிள்கள் விபின் யாதவ் மற்றும் சந்தன் சிங் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதும், அச்சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் நடந்தது என்பதும் தெளிவாகின்றது.
Also Read: மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று கூறினாரா தவெக தலைவர் விஜய்?
தமிழ்நாட்டு போலீசார் ஒருவரை பெல்ட்டால் கொடூரமாக தாக்கியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை; உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by Piyush Rai, Journalist, Dated April 24, 2025
X post by Samajwadi Party, Dated April 24, 2025
Report from Times of India, Dated April 27, 2025
Ramkumar Kaliamurthy
July 11, 2025
Ramkumar Kaliamurthy
June 26, 2025
Ramkumar Kaliamurthy
May 15, 2025