Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுக ஆட்சியில் தமிழ் தாத்தா உ.வே.சாவின் வீடு இடிக்கப்பட்டது.
வைரலாகும் செய்தி கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான செய்தியாகும்.
திமுக ஆட்சியில் தமிழ் தாத்தா உ.வே.சாவின் வீடு இடிக்கப்பட்டது என்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”திருட்டு திமுக மிஷினரி ஆட்சியில் சென்னையில் “தமிழ் தாத்தா” உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் வீடு இடிப்பு. தமிழனுக்கு இதைவிட கேவலம் உண்டா?” என்று இந்த செய்தி பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஜெயலலிதா காலில் விஜய் விழுந்ததாக பரவும் எடிட் படம்!
திமுக ஆட்சியில் தமிழ் தாத்தா உ.வே.சாவின் வீடு இடிக்கப்பட்டது என்பதாக பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தி புகைப்படத்திலேயே டிசம்பர் 13, 2014 என்று இடம்பெற்றிருந்த நிலையில் அதே தலைப்பில் இணையத்தில் ஆராய்ந்தபோது இந்து தமிழ் திசை வெளியிட்டிருந்த இதுகுறித்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதுமட்டுமின்றி, பல்வேறு செய்தி ஊடகங்களிலும் கடந்த 2014ஆம் ஆண்டே இந்த செய்தி இடம்பெற்றுள்ளது.

மேலும், குறிப்பிட்ட வீட்டினை அவரது வாரிசுகள் வேறொருவரிடம் விற்ற நிலையில், அந்த தனிநபரே உவேசாவின் வீட்டினை இடித்துள்ளார் என்பதும், பின்னர் அரசு ஊழியர்களின் தலையீட்டால் வீடு இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது என்பதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டே வீட்டின் உள்பகுதியை இடித்தபோது அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், 2014ஆம் ஆண்டு அந்த வீடு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் உத்தம நாதபுரத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக உ.வே.சாவின் நினைவு இல்லம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட இந்த செய்தியே கால்டுவெல் நினைவிடத்திற்கு உவேசாவின் வீடு இடிக்கப்பட்டதாக திரித்து பரப்பப்படுகிறது.
Also Read: தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
திமுக ஆட்சியில் தமிழ் தாத்தா உ.வே.சாவின் வீடு இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report From, Hindu Tamil, Dated December 13, 2014
Report From, Dinamani, Dated December 14, 2014