Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ‘எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான்’ என்று ஈபிஎஸ் கூறினார்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
அண்மையில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 21பேர் மரணமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விஷச்சாராயம் விற்பவர்கள் குறித்து போலீசார் தொடர் சோதனைகள் செய்து வருகின்றனர். இச்சோதனைகளில் இதுவரை 2461 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக மாலை மலர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், “புரட்சித் தலைவர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான். ஆனால் அந்த சாராயத்தால் ஒருவருக்காவது சின்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது நிரூபித்தால் அந்த நொடியே நான் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன்” என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில், “திமுகவின் ரூ.30,000 கோடி முறைகேடு தொடர்பாக ஆளுநரை சந்தித்து, விசாரணை கமிஷன் அமைக்கக் கோரி மனு அளிக்க உள்ளோம்” என்று தஞ்சை ஒரத்த நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் பேசியதாக புதிய தலைமுறை கடந்த திங்களன்று (மே 15) நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.
Also Read: Fact Check: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறதா?
‘எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook post, from Puthiya Thalaimurai, Dated May 15, 2023
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai, Dated May 18, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025