இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரஜினியால் நெல்சனுக்கு ஏற்பட்ட விபரீதம் என்று பரவும் போலி நியூஸ்கார்டு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரஜினியால் நெல்சனுக்கு ஏற்பட்ட விபரீதம் என்று குறிப்பிட்டு பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

அம்மாவை மதிக்காமல் சென்றாரா விஜய்?
கட்சிக்கொடி அறிமுக விழாவுக்குப்பின் தவெக தலைவர் விஜய் அவரது அம்மாவை மதிக்காமல் சென்றதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் விஜய் அவரின் அம்மாவிடம் திரும்பி பேசிவிட்டே சென்றார்.

பங்களாதேஷில் இந்துப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை என்று பரவும் உத்தரபிரதேச வீடியோ!
பங்களாதேஷில் இந்துப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை என்று பரவும் வீடியோ உத்தரபிரதேசம் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சோக நிகழ்வில் எடுக்கப்பட்டதாகும்.

தர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
தர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். அந்த விபத்து நடைபெற்றது மத்திய பிரதேசத்தில் ஆகும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாமா?
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று பரப்பப்படும் தகவல் தவறானதாகும். சென்ற ஆண்டின் பழைய நியூஸ்கார்டை வைத்து இந்த பொய் தகவலானது பரப்பப்பட்டு வருகின்றது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)