இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

பொங்கல் பரிசு குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினாரா?
“மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழக அரசு” என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆனால் இது தவறானச் செய்தியாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களின் வீடா இது?
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இது தவறானதாகும்.

அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தத்திற்கு காரணம் ரஜினிகாந்தின் உடல்நிலையா?
ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகின்றது. ஆனால் இது தவறானதாகும்.

மாட்டு மூத்திரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு அமெரிக்கா பேட்டண்ட் பெற்றுள்ளதா?
மாட்டு மூத்திரம் (அ) கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீரில்
இருந்து தயாரிக்கப்படும் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளைக்
குணப்படுத்தும் மருந்துகளுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளதாக பரவும்
தகவல் தவறானதாகும்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 மே மாதம், 24ஆம் தேதி நடைபெறுகிறதா?
தமிழக சட்டமன்றத் தேர்தல் 24.05.2021 அன்று நடைபெற உள்ளது
என்று பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)