Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

தமிழ்நாட்டைத் தாண்டி தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்த முடியாது என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஐபிஎஸ் தம்பதி வருண்குமார் – வந்திதா விவாகரத்து செய்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் முற்றிலும் தவறானதாகும். வருண்குமார் ஐபிஎஸ் இத்தகவல் பொய்யானது என்று உறுதி செய்துள்ளார்.

இந்தி திணிப்புக்கு ஆதரவு தெரிவித்து சீமான் பேசியதாக பரப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.


ஊடகங்களை பகைத்தால் விஜயகாந்துக்கு ஏற்பட்ட கதிதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா எச்சரித்தாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.