இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்றாரா கமல்ஹாசன்?
கமல்ஹாசன் கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்று குறிப்பிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

தேர்தல் ஆணையத்தை தனியார் மயமாக்க முடிவா?
தேர்தல் ஆணையத்தை வரும் நிதி ஆண்டிற்குள் தனியார் மயமாக்க முடிவெடுத்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. ஆனால் இது எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியாகும்.

கிரெட்டா தன்பெர்க் மீது வழக்குப் பதிவா?
டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சூழலியல் ஆர்லர் கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆனால் இது தவறானச் செய்தியாகும்.

குற்றவாளிகளை மத அடையாளத்துடன் காட்டும் ஊடகங்களுக்கு தடை என்றதா சென்னை உயர்நீதிமன்றம்?
குற்றவாளிகளை மத ரீதியான அடையாளங்களுடன் குறிப்பிட்டு செய்தி வெளியிடும் ஊடகங்கள் முற்றிலும் தடை செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாகப் பரவுகின்ற புகைப்படம் போலியானதாகும்.

மன்மோகன் சிங் ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டாரா?
மன்மோகன் சிங், முன்னாள் இந்தியப் பிரதமரான இவர் புதிய அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார் என்று பரவும் புகைப்படம் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)