இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

எல்.முருகன் பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று கூறினாரா?
பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது தவறானச் செய்தியாகும்.

இந்த முதியவர் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவரா?
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்ததாக முதியவர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானச் செய்தியாகும்.

அமெரிக்க கலவரத்தில் காவி கொடியுடன் இந்தியர் பங்கேற்றதாக வதந்தி
அமெரிக்க கலவரத்தில் காவி கொடியேந்தி இந்தியர் ஒருவர் பங்கேற்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது பழைய புகைப்படமாகும்.
முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

பிரதமர் மோடி, அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படமா இது?
பிரதமர் மோடி, அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படம் என்று
வைரலாகும் செய்தி தவறானதாகும்.

தமிழகப் பள்ளிக்கூடப் பாடநூலில் ஓரினச்சேர்க்கை பெற்றோர் பற்றிய பாடமா?
தமிழகப் பள்ளிக்கூடப் பாடநூல் ஒன்றில் ஓரினச்சேர்க்கை
பெற்றோர் குறித்த பாடம் இடம்பெற்றிருப்பதாகப் பரவும் புகைப்படம்
ஆதாரமற்றதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)