இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

முதல்வரை சந்திக்க மறுத்தாரா நிர்மலா சீதாராமன்?
தமிழக முதல்வரை சந்திக்க நிர்மலா சீதாராமன் அவர்கள் மறுத்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

திருவள்ளுவர் சிலைக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லையா?
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

அபராதம் போட்டதால் காவல்துறையினரை இஸ்லாமியப் பெண் அடித்ததாக வதந்தி
காவல்துறையினர் அபராதம் போட்டதால் காவல்துறை அதிகாரி ஒருவரை இஸ்லாமியப் பெண் அடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.ஆனால் இது தவறானத் தகவலாகும்

தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாஜகவினரா?
தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாமல் போட்டோவிற்கு போஸ் மட்டும் கொடுத்த பாஜகவினர்; கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாமல் போஸ் கொடுத்த மருத்துவர்கள் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ குறித்த தகவல் தவறானதாகும்.

சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் வாழ்த்து ட்விட் வெளியிட்டாரா?
சசிகலாவை வரவேற்கும் விதமாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட் ஒன்றினை வெளியிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)