இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?
கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்றாரா ஜெயக்குமார்?
அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

திமுக தற்போதைய ஆட்சியில் அடிகுழாயை சுற்றி மணல் அள்ளியதாகப் பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?
திமுக ஆட்சியில் அடிகுழாயை சுற்றி மணல் அள்ளியதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

மணிப்பூர் வன்கொடுமையில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் நபர்கள் என்று பரவும் புகைப்படத் தகவல் உண்மையா?
மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் எனப்பரவும் பிரேசில் வீடியோ!
மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் என்று பரவும் வீடியோ பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்டதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)