Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
2025 ஜூலையில் மின்கட்டணம் உயரவிருப்பதாக பரவும் பட்டியல் தவறானதாகும். அப்பட்டியல் 2022 ஆம் ஆண்டின் பழைய பட்டியலாகும்.
இந்தியா போர் தொடுக்கும் என்ற பயத்தில் வங்கிகளில் குவிந்த பாகிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
பாகிஸ்தானுக்கு சென்று பேட்டியெடுத்த யூடியூபர் மதன் கெளரி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.