Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று ஆளுநர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட’நல் திருநாட்டிற்கு பதிலாக ‘தமிழர்’நல் திருநாடு என்று குறிப்பிட்டு ஆனந்த விகடன் நியூஸ்கார்ட் வெளியிட்டதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையான நியூஸ்கார்டில் திராவிடநல் திருநாடு என்றே எழுதப்பட்டிருந்தது.
பஹ்ரைச் கலவரத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் பகுதியை சார்ந்த வீடுகளை உ.பி. அரசு புல்டோசரால் இடித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறாக பேசியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.
பிரபாகரன் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் சிலரை ஒற்றைப் பனைமரம் அம்பலப்படுத்தும் என்று ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தின் இயக்குநர் புதியவன் ராசையா கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 8, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 1, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 25, 2025