Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் உண்மையா?
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது புதிதான ஒன்றா?
காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது முதன்முறையாக மோடி ஆட்சியிலேயே சாத்தியமானது என்பதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

தாய் மற்றும் மகள் குறித்து தவறான கருத்தைக் கூறினாரா தந்தை பெரியார்?
தாய் மற்றும் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றினை தந்தை பெரியார் கூறியிருப்பதாகப் பரவுகின்ற தகவல் போலியானதாகும்.

குட்கா மென்ற மணமகனை அறைந்த மணமகள்; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
மணவறையில் மணமகன் குட்கா மென்றதால் மணமகள் அவரை அடித்ததாக வீடியோ ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இவ்வீடியோ சித்தரிக்கப்பட்டதாகும்.

சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்றாரா பாஜக எம்.பி. கணேஷ் சிங்?
சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்று பாஜக எம்.பியான கணேஷ் சிங் மக்களவையில் பேசியதாக தகவல் ஒன்று பரவி வருகின்றது. ஆனால் இத்தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)