Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வாட்ஸ்அப் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து வந்த செய்தியின் அடிப்படையில் முடக்கப்படும் என்பதாக விவரிக்கும் தகவல் ஒன்றின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதனை எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தார் வாசகர் ஒருவர்.
வாட்ஸ்அப் செயலியானது இன்று ஒருவருக்கிடையேயான தொடர்பினை எளிதாக்கி இருக்கிறது.
எங்கோ தொலைவில் இருந்தாலும், குடும்பத்துடன் இருப்பது போன்ற சூழலை இதுபோன்ற தகவல் பரிமாற்றச் செயலிகள் நமக்கு அளித்து வருகின்றன என்பதில் எவ்வித வேற்றுக்கருத்தும் இல்லை.
எனினும், வாட்ஸ்அப் குறித்த வதந்திகளுக்கும், வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகளுக்கும் இந்த சமூக வலைத்தளத்தில் சிலந்தி போல கட்டுண்டு கிடக்கும் சமூகத்தில் முடிவே இல்லை.
அவ்வகையில், வாட்ஸ்அப் குறித்து பரவிய ஒரு தகவலின் உண்மைத்தன்மை அறிய அதனை நமது வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பல வருடங்களாகப் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
வாட்ஸ்அப் செயலி முடக்கப்படும். இது நரேந்திர மோடியின் செய்தி என்பதாக நீண்டு கொண்டே போகும் இந்த தகவலின் உண்மைத்தன்மை அறிய அதிலுள்ள முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் ஆராய்ந்து பார்த்தோம்.
அதில், கடந்த 2015 ஆம் அண்டு முதலே இந்த வதந்தி சமூக வலைத்தள உலகில் உலா வருவதையும் அதற்கான உண்மையறியும் சோதனையை டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்துள்ளதை நம்மால் காண முடிந்தது.
See the Links:
https://www.cnet.com/news/whatsapp-ceo-message-hoax-returns-following-status-glitch/
மேலும், வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த தகவல் சொல்வது போல கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை நாம் தேடிய போது, அது போன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் வாட்ஸ் அப் செயலி நிறுவனத்தால் விதிக்கப்படவில்லை. கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தது.
மேலும், 2019 ஆம் ஆண்டு வரை 10 வருடங்களாக வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய வசதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த புகைப்படம் ஒன்றையும் வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அதிலும், இதுபோன்ற எவ்வித வாட்ஸ் அப் முடக்கம்; கட்டணம் போன்ற கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, வாட்ஸ் அப் முடக்கப்படுகிறது; மோடியின் அறிவிப்பு; கட்டணம் வசூலிக்கப்படும் போன்ற தகவல்களுடன் பரவுகின்ற இச்செய்தியானது முற்றிலும் போலியானதாகும். வாட்ஸ்அப் இதுபோன்ற எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.
WhatsApp: https://blog.whatsapp.com/index.php/2012/01/it-is-a-hoax-really-it-is/?page=2
Indian Express: https://indianexpress.com/article/technology/social/beware-of-fake-messages-whatsapp-is-not-shutting-down-nor-do-you-have-to-pay-5814325/
Alt News: https://www.altnews.in/hoax-whatsapp-will-be-off-between-1130-pm-6-am-and-become-chargeable/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)