Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பசுவின் சிறுநீரைக் குடிக்குமாறு உள்ள ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நம் நாட்டில் பசுவை ஒரு விலங்காக பார்க்காமல் அதை கடவுளாக பார்க்கும் பழக்கும் காலங்காலமாக இருந்து வருகின்றது. இதன் காரணமாகவே பசுவின் சிறுநீர், சாணம் போன்றவை புனிதப் பொருளாகவும் மருத்துவத் தன்மை உடையதாகவும் ஒரு சிலரால் கருதப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றைத் தொடர்பு படுத்தி பல பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் கூட பசுவின் சிறுநீரிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ந்து கண்டுபிடித்து அமெரிக்கர்கள் அதற்கு காப்புரிமை பெற்றுவிட்டனர் என்கிற செய்தி வைரலானது. இதை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தும் இது பொய் தகவல் நிரூபித்திருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க: https://newschecker.in/ta/fact-checks-ta/cow-urine-get-american-patent-for-its-cancer-and-more-medicine-is-a-fake-news
இதன் வரிசையில் தற்பொழுது யோகி ஆதித்யநாத் அவர்கள் பசுவின் சிறுநீரைக் குடித்தார் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Archive Link: https://archive.ph/eBpq6
Archive Link: https://archive.ph/6yQpU
Archive Link: https://archive.ph/278jt
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
யோகி ஆதித்யநாத் பசுவின் சிறுநீரைக் குடித்தார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய, அப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். இவ்வாறு செய்ததில் இப்புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் எனும் உண்மை நமக்கு தெரிய வந்தது.
உண்மையில் யோகி ஆதித்நாத் அடி பம்பில் நீர் குடிக்கும்போது எடுத்தப் புகைப்படத்தை எடிட் செய்து, அவர் பசுவின் சிறுநீரை குடித்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படத்தையும் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் இப்புகைப்படமானது கடந்த 2017 ஆம் ஆண்டே சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. எழுத்தாளர் தவ்லீன் சிங் என்பவரும் இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக் கண்ட பலர், இது போலியானப் படம் என்று கூறி, இவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த பதிவு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து உத்திரப் பிரதேச போலீஸ் இதுக்குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் யோகி ஆதித்யநாத் அவர்கள் பசுவின் சிறுநீரைக் குடிப்பதாக கூறி பரவும் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டதாகும். இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
UP Police: https://twitter.com/Uppolice/status/874306066938437636
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 4, 2025
Ramkumar Kaliamurthy
June 2, 2025
Ramkumar Kaliamurthy
May 29, 2025