மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டது குறித்து நாராயணன் திருப்பதி நய்யாண்டியாக டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

தமிழகத்தில் புதிதாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகின்றார். புதியவர்கள் பலருக்கு நிர்வாகத்தில் பொறுப்பு தந்து வருகின்றார்.
அந்த வகையில் முதல்வர் கீழ் இயங்கும் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்கள் மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறியுள்ளது.
இதனிடையே ஜெயரஞ்சன் அவர்களின் இந்தப் பதவி குறித்து தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த ஸ்க்ரீன்ஷாட்டில்,
“ஜெயரஞ்சனுக்கு தமிழ் நாடு அரசு சலங்கை கட்டி விட்டது என்ற செய்தி கேட்டு மனதிலே பாரம், கண்ணிலே ஈரம்”
என்று நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாக உள்ளது.
இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/2tYOZ

Archive Link: https://archive.ph/G1isp

Archive Link: https://archive.ph/z9Sfx
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டது குறித்து நாராயணன் திருப்பதி அவர்கள் பதிவிட்டதாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.
இவ்வாறு தேடியதில் நாராயணன் திருப்பதி அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.
உண்மையில் நாராயணன் திருப்பதி பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், நாராயணன் திருப்பதி அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது நாராயணன் திருப்பதி அவர்கள் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.
நாரயணன் திருப்பதி அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @Narayanan3 என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @narayanatirupa3 என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியிலேயே அது Parody(போலி)கணக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர்களின் புரிதலுக்காக நாராயணன் திருப்பதி அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஏற்கனவே இந்த போலிக் கணக்கிலிருந்து, கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று டிவிட்டர் #HBDKalaignar98 எனும் ஹேஷ்டேகுக்கு உரை எழுதியதை சாடி, டிவீட் ஒன்று போடப்பட்டிருந்தது.
அந்த டிவீட்டை நாராயணன் திருப்பதிதான் பதிவிட்டார் என்று மற்றவர்கள் நம்பியதால் அதுக்குறித்து விரிவாக ஆய்வு செய்து, அக்கருத்தை நாராயணன் திருப்பதி பதிவிடவில்லை, அவர் பெயரில் இயங்கிய போலிக் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க: “பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா”; வைரலாகும் நாராயணன் திருப்பதியின் டிவீட் உண்மையானதா?”
Conclusion
மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டது குறித்து நாராயணன் திருப்பதி நய்யாண்டியாக டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்..
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Imposter
Our Sources
Twitter Advanced Search:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)