Friday, March 14, 2025

Fact Check

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளால் மாணவர்களை கொலை செய்துக் கொண்டிருக்கின்றது என்றாரா செந்தில் வேல்?

banner_image

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து மாணவர்களை கொலை செய்துக் கொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகின்றது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆதங்கம் தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில்  பரவி வருகின்றது.

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்ததாக  செந்தில்வேல் ஆதங்கம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட்

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் கொடுமை ஆண்டுதோறும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டு கூட தனுஷ், கனிமொழி, சௌந்தர்யா என மூன்று மாணவர்கள் நீட் அச்சம் காரணமாக தங்களை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இந்த தொடர் மரணங்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சியினரை பார்த்து கை காட்டிக் கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை கிடைத்தப்பாடில்லை.

இந்நிலையில் ஊடகவியலாளர் செந்தில்வேல் அவர்கள், “தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கின்றது. திமுக பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்துக் கொண்டு இருக்கின்றதா என்ற அச்சம் ஏற்படுகின்றது”   என்று ஆதங்கம் தெரிவித்ததாக புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்ததாக  செந்தில்வேல் ஆதங்கம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்ததாக  செந்தில்வேல் ஆதங்கம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்ததாக  செந்தில்வேல் ஆதங்கம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது என்றாரா நட்டா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து மாணவர்களை கொலை செய்து கொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகின்றது என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஆதங்கம் தெரிவித்ததாக புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம்.

இதற்கு அவர்,

“இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட்”

என்று நமக்கு விளக்கமளித்தார்.

இதனடிப்படையில் பார்க்கும்போது  திமுக பொய் வாக்குறுதிகள் கொடுத்தது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்று தெளிவாகின்றது.

Also Read: மாணவர் தனுஷின் உறவினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக வதந்தி!

Conclusion

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து மாணவர்களை கொலை செய்துக் கொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகின்றது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆதங்கம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Puthiya Thalaimurai Digital Head Testimonial:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,430

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.