Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
புதிதாக பணியமர்த்தப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சாமி சிலையின் மேல் ஏறி நின்றதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு புதிதாக பல திட்டங்களையும் மாற்றங்களையும் தொடர்ந்து செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தின் அடிப்படையில் புதிதாக 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் மிகப்பரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த முன்னெடுப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சாமி சிலையின் மேல் ஏறி நின்றதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம்; வைரலாகும் படம் உண்மையானதா?
புதிதாக பணியமர்த்தப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சாமி சிலையின் மேல் ஏறி நின்றதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் படம் கடந்த ஒரு வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது எனும் உண்மை நமக்கு தெரிய வந்தது.


புதிய அர்ச்சகர்களுக்கு பணி ஆணையானது கடந்த சனிக்கிழமை (14/08/2021) அன்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமி சிலையின்மேல் அர்ச்சகர் நிற்குமாறு இருக்கும் படமானது கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை நம்மால் காண முடிகின்றது.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் படத்தில் இருக்கும் அர்ச்சகர் கண்டிப்பாக புதிதாக நிர்ணையிக்கப்பட்ட அர்ச்சகர்களில் ஒருவராக இருக்க இயலாது என்பது உறுதியாகின்றது.
புதிய அர்ச்சகர்களுக்கு நியமண ஆணை கொடுத்தலிருந்து, இதுக்குறித்து பல பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகின்றது. சமீபத்தில் கூட புதிய அர்ச்சகர்கள் நியமனத்தால் பழைய அர்ச்சகர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து அது பொய்யானத் தகவல் என்று விளக்கியிருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க: அனைத்து பிரிவினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதால் பழைய அர்ச்சகர்கள் கண்ணீருடன் வெளியேறியது உண்மையா?
சமூக வலைத்தளங்களில் புதிதாக பணியமர்த்தப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சாமி சிலையின் மேல் ஏறி நின்றதாக கூறி பரப்பப்படும் புகைப்படம் தவறானதாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
M.K.Stalin Official Twitter handle
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 13, 2025
Ramkumar Kaliamurthy
December 11, 2025
Ramkumar Kaliamurthy
December 10, 2025