செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024

HomeFact Checkஎடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் விஷம பதிவு!

எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் விஷம பதிவு!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட்

கொரோனா வைரஸைத் தொடர்ந்து குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் நிலையில், இந்தியாவில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் - 01

Facebook Link

எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் - 02

Facebook Link

Also Read: மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவிருக்கின்றாரா ரஜினிகாந்த்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தால் அச்செய்தியானது ஊடகங்களில் மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறி இருக்கும். ஆனால் இவ்வாறு ஒரு செய்தி ஊடகங்களில் வரவே இல்லை. மேலும் வைரலாகும் நியூஸ்கார்டில் சனிக்கிழமை தேதி (16/07/2022 ) இடம்பெற்றுள்ளது. ஆனால் நேற்று (17/07/2022) எடப்பாடி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேசி இருந்ததை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.

இதனையடுத்து புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால்,  புதிய தலைமுறை இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என உறுதி செய்ய, புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இதில் புதிய தலைமுறை இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. ஆகவே இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறை டிஜிட்டல் துறையின் தலைவர் கார்க்கியைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்ததில், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று தெளிவுப்படுத்தினார்.

Also Read: 140 என்று தொடங்கும் எண்ணிலிருந்து வரும் ஃபோன் அழைப்புகளுக்கு பதிலளித்தால் வங்கி கணக்கிலிருக்கும் பணம் திருடப்படுமா?  

Conclusion

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

Article Published by ETV Bharat, Published on 17/07/2022
Phone conversation with Karki, Puthiya Thalaimurai, on 18/07/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular