வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact CheckPoliticsகால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியிடம் விசாரணை?

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியிடம் விசாரணை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததாக நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் பிரியா.  சென்னை அரசு கல்லூரி ஒன்றில்  பட்டப்படிப்பு படித்து வந்த இவர், கால்பந்து போட்டியில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மூட்டு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரின் கால் அகற்றப்பட்டுள்ளது. இது பெறும்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் உடல்நிலை மோசமாகி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவி பிரியா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி சென்றதாகவும், இதன் காரணமாக அவரை போலீசார் விசாரித்ததாகவும் நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததாக பரவும் நியூஸ்கார்டு - 02
Screenshot from Twitter @ManasaSangeeth
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததாக பரவும் நியூஸ்கார்டு - 03
Screenshot from Facebook /Iyya Venkatesan
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததாக பரவும் நியூஸ்கார்டு - 04
Screenshot from Facebook / எம்.ஆர்.கே.பி வெறியன் வேல்முருகன்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதாக வதந்தி!

Fact Check/Verification

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததாக நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்நிறுவனங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்ய முடிவெடுத்தோம். முன்னதாக புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் புதிய தலைமுறையில் இந்த நியூஸ்கார்ட் வெளிவந்ததற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதிலும்  வைரலாகும் நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் பிரசுரித்ததற்கான தரவு கிடைக்கவில்லை. இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் “நியூஸ்கார்ட் போலியானது” என்று தெளிவு செய்தார்.

இதனையடுத்து பாஜக சமூக ஊடக அணித் தலைவர்  சிடிஆர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், ‘இது பொய்யான செய்தி’ என்று உறுதி செய்தார்.

அமர் பிரசாத் ரெட்டியும் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினாரா சென்னை மேயர் பிரியா?

Conclusion

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை  என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweet, from Puthiya Thalaimurai, on Nov 15, 2022
Phone Conversation with Sugitha Sarangaraj Digital Head, News 7 Tamil, on November 15, 2022
Tweet, from Amar Prasad reddy, on Nov 15, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular