வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkபட்டியலின பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா ஆசி வாங்க முயன்றபோது முகம் சுளித்தாரா பூரி சங்கராச்சாரியார்?

பட்டியலின பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா ஆசி வாங்க முயன்றபோது முகம் சுளித்தாரா பூரி சங்கராச்சாரியார்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா பூரி சங்கராச்சாரியார் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றபோது, அவர் பட்டியலினத்தவர் என்பதால் சங்கராச்சாரியார் காலை தூக்கி முகம் சுளித்ததாக கலைஞர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ராம்சங்கர் கதேரியா தொடர்ந்து மூன்று முறை பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். 13 வயதிலிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஒருவராக உள்ளார். இதுத்தவித்து தேசிய பட்டியலின கமிஷனின் தலைவர் உள்ளிட்ட பதவிகளிலும் ராம்சங்கர் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரது சாதி காரணமாக பூரி கோவர்தன பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி நிஸ்சலந்த சரஸ்வதி ராம்சங்கருக்கு ஆசீர்வாதம் வழங்க மறுத்ததாக கூறி கலைஞர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ராம்சங்கர் கதேரியா பூரி சங்கராச்சாரியார் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றபோது சங்கராச்சாரியார் முகம் சுளித்ததாக கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி

Twitter Link | Archive Link

ராம்சங்கர் கதேரியா பூரி சங்கராச்சாரியார் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றபோது சங்கராச்சாரியார் முகம் சுளித்ததாக கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி - 01

Facebook Link

ராம்சங்கர் கதேரியா பூரி சங்கராச்சாரியார் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றபோது சங்கராச்சாரியார் முகம் சுளித்ததாக கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி - 02

Facebook Link

Also Read: நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்தாரா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா ஆசி வாங்க முயன்றபோது,  அவர் பட்டியலினத்தவர் என்பதால் சாதி  பூரி சங்கராச்சாரியார் ஆசி வழங்க மறுத்து முகம் சுளித்ததாக கலைஞர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் ராம்சங்கர் கதேரியா அவரது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் இத்தகவலை மறுத்து, மறுப்பு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளதை காண முடிந்தது.

அப்பதிவில்,

நான் மே 15-லிருந்து மே 22 வரை பூஜை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். இப்பூஜையில் கலந்துக்கொள்ள சங்கராச்சாரியாருக்கு அழைப்பு விடுக்க 16/03/2022 அன்று சென்றிருந்தேன். எங்கள் சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் இருந்தது. இச்சந்திப்பில் அவரின் ஆசீர்வாதத்தை பெற்றேன். இதைத் தவிர்த்து ஊடகங்களில் வருவதுபோல் எவ்வித நிகழ்வும் அங்கு நடக்கவில்லை. ஊடகங்களில் வரும் தகவல் முற்றிலும் பொய்யானது. இதை நான் வன்மையாக கண்டிப்பதோடு, இதுபோன்ற தவறான கருத்துகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து தேடுகையில், வைரலாகும் செய்தியில் காணப்படும் புகைப்படங்களை ராம்சங்கர் கதேரியாவே, ‘சங்கராச்சாரியார் சுவாமி நிஸ்சலந்த சரஸ்வதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது’ என்று தலைப்பிட்டு அவரது சமூக ஊடகப் பக்கங்களில் மார்ச் 17 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. இத்துடன் வேறு சில புகைப்படகளும் அதில் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து நியூஸ்செக்கர் சார்பில் ராம்சங்கர் கதேரியாவின் உதவியாளர் ராதே ஷ்யாம் யாதவ்வை தொடர்புக் கொண்டு வைரலாகும் சர்ச்சைக் குறித்து விசாரிக்கையில், “வைரலாகும் படங்கள் கிராமத்தில் நடந்த பூஜையில் கலந்துக் கொள்ள் சுவாமி நிஸ்சலந்தை அழைக்க சென்றபோது எடுக்கப்பட்டவை. இந்த சந்திப்பு ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடைப்பெற்றது. இச்சந்திப்பின்போது சங்கராச்சாரியார் உட்காரும் நிலையை மாற்றியபோது எடுக்கப்பட்ட படத்தையே எதிர்க்கட்சியினர் தவறான நோக்கத்துடன் பரப்பி தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்று ஒரு சம்பவம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் நடந்துள்ளது. பட்டியலினத்தவர் என்பதால் ராம்சங்கருக்கு ஆசிர்வாதம் மறுக்கப்பட்டது என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது” என்று விளக்கமளித்தார்.

Also Read: UPI பணப் பரிவர்த்தணைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா?

Conclusion

பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா பூரி சங்கராச்சாரியார் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றபோது, அவர் பட்டியலினத்தவர் என்பதால் சங்கராச்சாரியார் காலை தூக்கி முகம் சுளித்ததாக கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

(இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் இந்தியில் பிரசுரமாகியுள்ளது.)

Result: Partly False

Sources

Tweet and Facebook post shared by Dr. Ramshankar Katheria on 26 August, 2022
Tweet and Facebook post shared by Dr. Ramshankar Katheria on 17 March, 2022
Newschecket’s telephonic conversation with Radheshyam Yadav, PA to BJP MP Dr. Ramshankar Katheria


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular