வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkபுல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி தகராறு; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி தகராறு; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி ஒருவர் காடை விற்கும் கடையில் தகராறு செய்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி ஒருவர் காடை விற்கும் கடையில் தகராறு செய்ததாக பரவும் நியூஸ்கார்ட்

கர்நாடகாவில் எட்டாம் வகுப்பு கன்னட பாடப் புத்தகத்தில் சாவர்க்கர் சிறையில் இருந்தபோது புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்மண்ணுக்கு வந்து சென்றார் எனும் தகவல் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் ஒன்று சர்ச்சையாகிய நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்ததாக கூறி காடை கோழி விற்கும் கடையில் தகராறு செய்ததாகவும், பொதுமக்கள் அவரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி ஒருவர் காடை விற்கும் கடையில் தகராறு செய்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 01

Twitter Link | Archive Link

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி ஒருவர் காடை விற்கும் கடையில் தகராறு செய்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 02
Source: Facebook

Facebook Link

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி ஒருவர் காடை விற்கும் கடையில் தகராறு செய்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 03

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர்! வைரலாகும் தகவல் உண்மையானதா?

Fact Check/Verification

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி ஒருவர் காடை விற்கும் கடையில் தகராறு செய்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால்,  புதிய தலைமுறை இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என உறுதி செய்ய, புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

அதில் வைரலாகும் இந்த நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக, முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி கைது என்று தலைப்பிட்டு வைரலாகும் நியூஸ்கார்டில் காணப்படும் நபரின் புகைப்படத்தை கொண்ட நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட வைரலாகும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிந்தது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், வைரலாகும் நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

புல் புல் பறவையை

இதனையடுத்து  புதிய தலைமுறை டிஜிட்டல் துறையின் தலைவர் கார்க்கியைத்தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்ததில், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று அவரும் தெளிவுப்படுத்தினார்.

Also Read: கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டதா?

Conclusion

புல் புல் பறவையை அடித்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி ஒருவர் காடை விற்கும் கடையில் தகராறு செய்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources

Tweet, from Puthiya Thlaimurai on April 08, 2022
Phone Conversation with Karki, Digital Head, Puthiya Thalaimurai on September 13, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular