Fact Check
தமிழ்நாடு அரசுப் பேருந்து பயணச்சீட்டில் மதப்பிரச்சாரம் செய்யப்பட்டதா?
தமிழ்நாடு அரசுப் பேருந்து பயணச்சீட்டில் மதப்பிரச்சாரம் செய்யப்பட்டதாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தில் அரசுப் பயணச்சீட்டு மூலம் கிருஸ்துவ மதமாற்றத்திற்கு தொடர்ந்து உதவி வருவது மிகவும் வேதனையான விஷயம்..!” என்று அப்புகைப்படம் பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
தமிழ்நாடு அரசுப் பேருந்து பயணச்சீட்டில் மதப்பிரச்சாரம் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
பொதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பயணச்சீட்டுகளில் குறிப்பிட்ட வழித்தடத்திற்கான டிக்கெட்டுகளை வழங்கும் பணிமணை பெயர்கள் இடம் பெற்றிருக்கும்.

ஆனால், வைரலாகும் புகைப்படத்தில் “இரத்தினம் நாடார்” என்கிற வாசகம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து, குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கே.முத்துராமன் என்பவரது ட்விட்டர் பதிவு நமக்குக் கிடைத்தது.
Crap செய்யப்பட்டு அரசுப் பேருந்து பயணச்சீட்டில் மத வாசகங்கள் என்பதாகப் பரவும் புகைப்படத்தின் முழுமையான புகைப்படம் அப்பதிவில் இடம்பெற்றிருந்ததுடன், “நாகர்கோவில் இரத்தினம் நாடார் தனியார் பேருந்தில் மதப் பிரச்சார வாசகம்! அவர்கள் போட்ட பிச்சையில் வந்த அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்காது என நம்புவோம்?
@HRajaBJP @imkarjunsampath” என்று பதிவிட்டிருந்தார்.
அவருடைய பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை எடுத்தே தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பயணச்சீட்டில் மதப்பிரச்சாரம் என்பதாக பரப்பி வருகின்றனர்.
Also Read: அண்ணாமலை பேசியதாகப் பரவும் பேச்சாளர் பெருமாள் மணியின் படையப்பா வெற்றி விழா உரை வீடியோ!
Conclusion
தமிழ்நாடு அரசுப் பேருந்து பயணச்சீட்டில் மதப்பிரச்சாரம் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Sources
Twitter Post From @Its_Muthu_Rss, Dated January 18, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)