சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkகுமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் கோவை வீடியோ!

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் கோவை வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோ.

Fact: உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகும்.

“பொன்னாரின் இமாலய சாதனை!! குமரியில் புதிதாக அருவி திறப்பு !! #marthandambridge #marthandam மேம்பாலம்!! உலக மகா ஊழலுக்கு எடுத்துக்காட்டு இந்த சங்கி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதாவது கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் இருக்கும் மேம்பாலத்தில் இருந்து அருவிபோல் நீர் கொட்டுவதாக பரப்பப்படுகின்றது.

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

X Link | Archive Link

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

Archive Link

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?

Fact Check/Verification

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் இச்சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாக கூறி இதே வீடியோ பரவி வருவதை காண முடிந்தது.

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

இதனையடுத்து இச்சம்பவம் உண்மையில் எங்கு நடந்தது என்று ஆராய்கையில் இச்சம்பவம் கோவையின் ராமநாதபுரம்-சுங்கம் மேம்பாலத்தில் நடந்ததாக சமயம் தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

தொடர்ந்து தேடுகையில் பாலிமர் நியூஸ், கலாட்டா வாய்ஸ் உள்ளிட்ட ஊடகங்களும் இச்சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகவே செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி மசூதி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Samayam Tamil, May 15, 2024
Report from Polimer News, May 15, 2024
Report from Galatta Voice, May 16, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular