புதன்கிழமை, மே 29, 2024
புதன்கிழமை, மே 29, 2024

HomeFact Checkஇந்துக்களின் அலமாரியை உடைத்து முஸ்லீம்களுக்கு பணம் கொடுப்போம் என்றாரா கார்கே?

இந்துக்களின் அலமாரியை உடைத்து முஸ்லீம்களுக்கு பணம் கொடுப்போம் என்றாரா கார்கே?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்றார் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

Fact: பிரதமர் மோடி இவ்வாறு தவறாக பரப்பி வருவதாகவே கார்கே பேசினார்.

“கார்கே கூறுவதை கேளுங்கள்… உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அதிக பிள்ளைகளை பெற்ற முஸ்லீம்களுக்கு கொடுப்போம். ஹிந்துக்களிடம் அதிக பிள்ளைகள் இல்லாததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாக பரப்பப்படும் தகவல்

X Link | Archive Link

இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாக பரப்பப்படும் தகவல்

X Link

இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாக பரப்பப்படும் தகவல்

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: போதை மனிதனின் அடிப்படை உரிமை என்று பேசினாரா இயக்குநர் வெற்றிமாறன்?

Fact Check/Verification

இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாக பரவும் வீடியோவில், “காங்கிரஸ்காரர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? காங்கிரஸ் உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து, அதில் இருக்கும் பணத்தை எடுத்து, மற்றவர்களுக்கு தரப்போகின்றார்கள், முஸ்லீம்களுக்கு தரப்போகின்றார்கள். அவர்களுக்கு அதிக பிள்ளைகள் உள்ளதால் அவர்களுக்கு அதிகம் கிடைக்கும்…. சகோதரா உங்களுக்கு பிள்ளை இல்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கார்கே பேசுவதாக இருந்தது.

எனவே  இவ்வீடியோவின் பின்னணியில் இருக்கும் உண்மையை அறிய இவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில், “LIVE: Congress President Shri Mallikarjun Kharge addresses the public in Ahmedabad, Gujarat” என்று தலைப்பிட்டு கார்கே பேசிய உரையின் முழுப்பகுதி வீடியோவாக பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

அந்த உரையை முழுமையாக கண்டப்பின் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கார்கே பேசியதில் முன்பகுதியையும், பின்பகுதியையும் நீக்கி தவறான இக்கருத்து பரப்பப்படுகின்றது என அறிய  முடிந்தது.

ஏறக்குறைய 1 மணி நேரம் இருந்த அவ்வீடியோவில் 31:50 நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கார்கே பேசி இருந்ததை காண முடிந்தது.

உண்மையில் அவர் பேசி இருந்ததாவது,

“சாதிவாரி கணக்கெடுப்பை செய்வோம் என்று நாங்கள் கூறி இருந்தோம். எந்த இடத்தில், எந்த சாதியினர்... எவ்வளவு படித்தவர்கள் இருக்கின்றார்கள், எவ்வளவு பட்டதாரிகள் இருக்கின்றனர், எவ்வளவு வருமானம், எவ்வளவு தனி நபர் வருமானம் இருக்கின்றது... இதையெல்லாம் அறிந்துதுக்கொள்ள நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை செய்யப்போகின்றோம்.

ஆனால் மோடி என்ன கூறுகின்றார்... காங்கிரஸ்காரர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? காங்கிரஸ் உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து, அதில் இருக்கும் பணத்தை எடுத்து, மற்றவர்களுக்கு தரப்போகின்றார்கள், முஸ்லீம்களுக்கு தரப்போகின்றார்கள்.  அவர்களுக்கு அதிக பிள்ளைகள் உள்ளதால் அவர்களுக்கு அதிகம் கிடைக்கும்....

சகோதரா உங்களுக்கு பிள்ளை இல்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?...

ஆனால் நாங்கள் விநியோகம் செய்பவர்கள் இல்லை. அதுபோல யாருக்கும் நாங்கள் எடுத்துக் கொடுக்கப்போவதில்லை. மன்னித்துகொள்ளுங்கள்!  மோடி அவர்களே நீங்கள் பரப்பும் இந்த எண்ணங்கள் தவறானது. இந்த எண்ணங்கள் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், எங்களுக்கும் தீங்கானது.”

Also Read: மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளாரா செங்கோட்டையன்?

Conclusion

இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

உண்மையில் மோடி இவ்வாறு பேசி வருகின்றார் என்றே கார்கே பேசியுள்ளார். அவர் பேசியதில் முன்பகுதியையும், பின்பகுதியையும் நீக்கி தவறான இக்கருத்து பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.

Result: Altered Video

Our Sources
Youtube video, Indian National Congress, Dated 03 May, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular