திங்கட்கிழமை, ஆகஸ்ட் 12, 2024
திங்கட்கிழமை, ஆகஸ்ட் 12, 2024

HomeFact Checkவயநாடு பேரிடருக்கு விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

வயநாடு பேரிடருக்கு விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வயநாடு பேரிடருக்கு தவெக தலைவர் விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக பரவும் நியூஸ்கார்டு.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். புதிய தலைமுறை இதை உறுதி செய்துள்ளது.



“நிலச்சரிவு- நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்… கேரளா வயநாடு நிலச்சரிவு நிதியுதவியாக தன் சார்பாக 1 கோடியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக 1 கோடியும் மொத்தமாக 2 கோடி வழங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வயநாடு பேரிடருக்கு தவெக தலைவர் விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக பரவும் நியூஸ்கார்டு.

Facebook Link | Archive Link

வயநாடு பேரிடருக்கு தவெக தலைவர் விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக பரவும் நியூஸ்கார்டு.

Archive Link

வயநாடு பேரிடருக்கு தவெக தலைவர் விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக பரவும் நியூஸ்கார்டு.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் பழைய படம்!

Fact Check/Verification

வயநாடு பேரிடருக்கு தவெக தலைவர் விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக பரவும் நியூஸ்கார்டில் காணப்படும் எழுத்துரு மற்றும் டிசைனை பார்க்கையிலேயே அது போலியான நியூஸ்கார்டு என்பதை உணர முடிந்தது.

இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் அதை  முழுமையாக ஆராய்ந்து உரிய ஆதாரங்களுடன் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என நிரூபிக்க முடிவு செய்தோம்.

முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் புதிய தலைமுறை இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை. ஆனால் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள 31/07/2024 அன்று கேரளா வயநாடு நிலச்சரிவில் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் என்று இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தாக நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.

வாசகரகளின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் வைரலாகும் நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். இவ்விரண்டு கார்டுகளிலும் மேற்பகுதி இடதுப்புற படமும், ’நிலச்சரிவு- நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்’  என்கிற வாசகமும் இடம்பெற்றிருப்பதை காணலாம்.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுஎன உறுதி செய்தார்.

 Also Read: வயநாடு நிலச்சரிவு என்று பரவும் 2020ஆம் ஆண்டு இடுக்கி புகைப்படங்கள்!

Conclusion

வயநாடு பேரிடருக்கு தவெக தலைவர் விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டானது போலியானதாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
X post from the user, Puthiya Thalaimurai, Dated July 31, 2024
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular