சனிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2024
சனிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2024

HomeFact Check7837018555 என்கிற எண்ணை தொடர்புக் கொண்டால் இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா?

7837018555 என்கிற எண்ணை தொடர்புக் கொண்டால் இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் 7837018555 எண்ணை தொடர்புக் கொண்டால் போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும்.

Fact: போலீஸ் பாதுகாப்பு தரப்படுகின்றது எனும் தகவல் உண்மையானதே. ஆனால் எண் தவறானதாகும். 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களை அழைத்தால் காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

“இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக இருக்கும் எந்தப் பெண்ணும் வீட்டுக்குச் செல்ல வாகனம் கிடைக்காமல் போனால், காவல்துறை உதவி எண்களை (1091 மற்றும் 7837018555) தொடர்பு கொண்டு வாகனம் கோரலாம் என்ற இலவசப் பயணத் திட்டத்தை காவல்துறை தொடங்கியுள்ளது. அவர்கள் 24×7 மணிநேரமும் வேலை செய்வார்கள். கட்டுப்பாட்டு அறை வாகனம் அல்லது அருகிலுள்ள பிசிர் வாகனம்/ ஷோ வாகனம் அவளைப் பாதுகாப்பாக அவள் இலக்குக்குக் கொண்டு செல்லும். இந்த சேவை இந்தியா முழுவதுக்கும் தொடங்கப்பட்டுள்ளது”  என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

Facebook Link | Archive Link

Facebook Link

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அம்மாவை மதிக்காமல் சென்றாரா விஜய்?

Fact Check/Verification

இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் 7837018555 எண்ணை தொடர்புக் கொண்டால் போலீஸ் பாதுகாப்பு தரப்படுவதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் இத்தகவல் உண்மை. ஆனால் இத்தகவலில் குறிப்பிட்டுள்ள எண் தவறானது என அறிய முடிந்தது.  தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இதுக்குறித்த மறுப்பு பதிவு பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

அப்பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது,

வதந்தீ: - இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக இருக்கும் எந்தப் பெண்ணும் வீட்டுக்குச் செல்ல வாகனம் கிடைக்காமல் போனால், காவல்துறை உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மை. ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள எண் ( 7837018555) தவறானது, தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல.

தமிழ்நாடு காவல்துறை, 'இரவில் தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களை அழைக்கலாம். காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து உங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்'. இது தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.

இதனையடுத்து வைரலாகும் தகவலில் குறிப்பிட்டுள்ள 7837018555 என்கிற எண் குறித்து தேடினோம். இத்தேடலில் அந்த எண்ணானது பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா நகரத்தில் அறிமுகப்படுத்த எண்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியின் வாயிலாக அறிய முடிந்தது.  

இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் 7837018555 எண்ணை தொடர்புக் கொண்டால் போலீஸ் பாதுகாப்பு தரப்படுகின்றது.
Screengrab from Indian Express

பஞ்சாப் மாநில போலீசாரும் இதை உறுதிப்படுத்தி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து இத்தகவலில் குறிப்பிட்டுள்ள 1091 என்கிற எண் குறித்து ஆராய்கையில் இந்த எண்ணானது பெண்களுக்கான போலீஸ் உதவி எண் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் இணையத்தளம் வழியாக அறிய முடிந்தது.

இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் 7837018555 எண்ணை தொடர்புக் கொண்டால் போலீஸ் பாதுகாப்பு தரப்படுகின்றது.

தமிழ்நாடு காவல்துறையின் இணையத்தளத்திலும் இந்த எண்ணானது பெண்களுக்கு உதவி எண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் 7837018555 எண்ணை தொடர்புக் கொண்டால் போலீஸ் பாதுகாப்பு தரப்படுகின்றது.

 Also Read: ராகுல் காந்தியை குனிந்து வணங்கினாரா உத்தவ் தாக்கரே?

Conclusion

தமிழ்நாட்டில் இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் போலீஸ் பாதுகாப்பு தரப்படுவதாக பரவும் தகவல்  உண்மையேயாகும். ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள எண் (7837018555) தவறானதாகும். உண்மையில் 044-23452365, 044-28447701 ஆகிய எண்களை தொடர்புக் கொண்டால் காவல்துறையின் உதவி கிடைக்கும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Facebook post by Tamil Nadu Police, Dated August 24, 2024
X post by Punjab Police India, Dated December 05, 2019
Report from Indian Express, December 02, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular