ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024

HomeFact Checkஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிப்பு… இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா?

ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிப்பு… இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழ்நாட்டில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

Fact: இச்சம்பவம் கர்நாடகாவின் பெங்களூரில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்பில்லை.

“ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிப்பு. இனிமேல் நிம்மதியாக வீட்டு விழாக்களில் கூட பங்கு கொள்ள இயலாது போல! திராவிட ஆட்சிடா!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ்நாட்டில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

X Link | Archive Link

தமிழ்நாட்டில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

Facebook Link

தமிழ்நாட்டில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நிர்வாண பணிகளில் திருப்தியில்லை…. நடிகை கஸ்தூரி பெயரில் வைரலாகும் போலி டிவீட்

Fact Check/Verification

தமிழ்நாட்டில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டதாக பரவும் வீடியோவில் பெண்கள் கன்னடத்தில் பேசுவதை கேட்க முடிந்தது. இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் வீடியோவில் காணப்படும் சம்பவம் அக்டோபர் 10 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்ததாக கூறி டைம்ஸ் நவ் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

தமிழ்நாட்டில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

தொடர்ந்து தேடியதில் மேலும் சில ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சம்பவம் பெங்களூரில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

Also Read: சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பரவும் 2015 ஆம் ஆண்டின் படம்!

Conclusion

தமிழ்நாட்டில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் கர்நாடகாவின் பெங்களூரில் நடந்ததாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from Times Now News, Dated October 15, 2024
Report from Hindustan Times, Dated October 15, 2024
Report from India Today, Dated October 15, 2024
Report from Times of India, Dated October 15, 2024


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular