புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkராகுல் காந்தி எம்பி, எம்எல்ஏ தகுதி இழப்புத் தீர்ப்புக்கு எதிரான மசோதாவை 2013ல் கிழித்தெறிந்தாரா? உண்மை...

ராகுல் காந்தி எம்பி, எம்எல்ஏ தகுதி இழப்புத் தீர்ப்புக்கு எதிரான மசோதாவை 2013ல் கிழித்தெறிந்தாரா? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
எம்எல்ஏ, எம்பி தகுதி இழப்பு தீர்ப்புக்கு எதிரான மசோதாவைக் கிழித்தெறிந்த ராகுல் காந்தி.

Fact
 வைரலாகும் புகைப்படச்செய்தி தவறானதாகும்.  2012ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைக் கிழிப்பதாக கூறி அந்த பேப்பரைக் கிழித்தெறிந்தார்.

ராகுல் காந்தி, கடந்த 2013ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் எம்பி, எம்.எல்.ஏ தகுதி இழப்பு தொடர்பான தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யவிருந்த மசோதாவைக் கிழித்துப் போட்டதாக புகைப்படச்செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”2013ல் உச்சநீதிமன்றம் லில்லி தாமஸ் Vs மத்திய அரசு இடையிலான வழக்கில் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால் எம்பி அல்லது எம்எல்ஏ உடனடியாக தகுதி இழப்பு என்று தீர்ப்பு வழங்கியது. அதை மாற்ற சட்டம் கொண்டு வர முனைந்தது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த மசோதாவை கிழித்து எறிந்து ராகுல் ஒரு நாடகம் நடத்தினார். தற்போது அந்த தீர்ப்பு அடிப்படையில் தான் பதவி பறிபோக வாய்ப்பு” என்பதாக இந்த புகைப்படச்செய்தி பரவி வருகிறது.

Screenshot from Facebook/anand.nagaraja.7
Screenshot from Facebook/arunprabuasp
Screenshot Facebook/eshu24

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

Factcheck / Verification

ராகுல் காந்தி, கடந்த 2013ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் எம்பி மற்றும் எம்எல்ஏ தகுதி இழப்பு தீர்ப்புக்கு எதிராக அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு தாக்கல் செய்ய இருந்த மசோதாவைக் கிழித்து எறிந்ததாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

2013ஆம் ஆண்டில் ராகுல் காந்தி எம்பி, எம்.எல்.ஏ தகுதி நீக்கத்திற்கு எதிரான மசோதாவைக் கிழித்திருக்கிறாரா என்பது குறித்து கீ-வேர்டுகள் மூலமாக தேடியபோது, 2013, செப்டம்பர் 27 அன்று ”Rahul Gandhi: Stop the ordinance that saves criminal politicians” என்கிற தலைப்பில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று இடம்பெற்றிருந்தது.

அதில், “தகுதி நீக்கத்திற்கு எதிரான மசோதா குறித்த என்னுடைய கருத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த மசோதா தேவையில்லாதது; கிழித்து எறியப்படவேண்டியது. என்னுடைய தனிப்பட்ட கருத்து இது. நான் மீண்டும் சொல்கிறேன்;இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.” என்று தெரிவித்திருந்தார். வார்த்தைகளில் மட்டுமே இந்த மாசோதாவைக் கிழித்தெரிய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்; அவர் உண்மையிலேயே அந்த மசோதாவைக் கிழித்ததாக எந்த காட்சியும் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கவில்லை. Times of India உள்ளிட்ட ஊடகங்களும் அவர் மசோதாவைக் கிழிக்க வேண்டும் என்று கூறிய வார்த்தைகளை உருவகப்படுத்தி மட்டுமே வெளியிட்டிருந்தன. CNN, Times Now உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான வீடியோக்களிலும் அவர் மசோதாவைக் கிழித்ததாக காட்சி எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

தொடர்ந்து, வைரல் பதிவில் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை நாம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கடந்த 2012ஆம் ஆண்டு NDTV வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது. “In Dramatic Flourish, Rahul Gandhi rips up paper at Rally” என்கிற தலைப்பில் இடம்பெற்றிருந்த வீடியோவில் வைரலாகும் புகைப்படத்தில் அவர் பேப்பர் ஒன்றை கிழிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தி இந்தியா டுடே உள்ளிட்ட செய்தித்தளங்களிலும் இடம்பெற்றுள்ளது. இச்செய்தியில் இடம்பெற்றுள்ள புகைப்படமே தற்போது வைரலாகி வருகிறது.

இது, 2013ஆம் ஆண்டிற்கு முன்பாகவே நடைபெற்ற நிகழ்வின் புகைப்படம் என்பது தெளிவாகிறது. குற்றவழக்குகளில் தண்டனை பெறுகின்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான லில்லி தாமஸ் வழக்கு குறித்து டெக்கான் ஹெரால்ட் வெளியிட்டுள்ள கட்டுரையை இங்கே காணுங்கள்.

Also Read: Fact Check: ஜம்மு-காஷ்மீரில் அமைந்த உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் என்று பரவிய சீனா வீடியோ!

Conclusion

ராகுல் காந்தி, கடந்த 2013ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் எம்பி மற்றும் எம்எல்ஏ தகுதி இழப்பு தீர்ப்புக்கு எதிராக அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு தாக்கல் செய்ய இருந்த மசோதாவைக் கிழித்து எறிந்ததாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, Indian National Congress, Dated September 27, 2013
YouTube Video From, NDTV, Dated February 2012
News Report From, India Today, Dated February 15, 2012
News Report From, Deccan Herald, Dated March 24, 2023





(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular