Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ராகுல் காந்தியின் பீகார் யாத்திரைக்கு கூடிய கூட்டம்.
வைரலாகும் வீடியோவுக்கும் ராகுல் காந்தி யாத்திரைக்கும் தொடர்பில்லை. மகாராஷ்டிராவில் நடந்த ரேக்ளா பந்தயத்தை பார்க்க வந்த கூட்டத்தின் வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை என்கிற பெயரில் பீகாரில் 16 நாட்கள் யாத்திரை சென்றுக்கொண்டிருக்கின்றார். இந்நிலையில் ராகுல் காந்தியின் பீகார் யாத்திரையை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இவ்வீடியோவை புதுச்சேரி காங்கிரஸின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் உட்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தலைமை தேர்தல் ஆணையர் பாஜக அமைச்சர்களுடன் தனி விமானத்தில் பயணித்தாரா?
ராகுல் காந்தியின் பீகார் யாத்திரைக்கு கூடிய கூட்டம் என்று வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் @love_bailgada_sharyat என்கிற பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூன் 23, 2025 அன்றே வைரலாகும் வீடியோவின் காட்சிகளை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது (ஆனால் ராகுல் காந்தியின் பீகார் யாத்திரை ஆகஸ்ட் 17, 2025 அன்றுதான் தொடங்கப்பட்டது).

தொடர்ந்து தேடுகையில் ஜூன் 23, 2025 அன்று மற்றொரு யூடியூப் பக்கத்தில் மகாராஷ்ட்ராவில் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் எடுக்கப்பட்டதாக கூறி இவ்வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து மகாராஷ்ட்ரா ரேக்ளா பந்தயம் குறித்து தேடுகையில் மகாராஷ்ட்ராவின் சட்டாரா மாவட்டத்தில் உள்ள பெத்காவ்ன் கிராமத்தில் நடந்த ரேக்ளா பந்தயம் குறித்து பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிந்தது. அவ்வீடியோக்களில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இடம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதனை தொடர்ந்து கூகுள் மேப்பின் உதவியுடன் அப்பகுதி குறித்து ஆராய்கையில், பெத்கான் கிராமத்தின் ஹிந்த் கேசரி மைதானத்தில் இவ்வீடியோ எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது.

இதனையடுத்து பெத்காவ்ன் கிராமத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தை நடத்திய விழாக்குழுவில் ஒருவரான கார்லோஸ் பஹல்வானை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம். அவர் வைரலாகும் வீடியோ பெத்காவ்ன் ஹிந்த் கேசரி மைதானத்தில்தான் எடுக்கப்பட்டது என உறுதி செய்தார். இப்பந்தயம் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நம் ஆய்வில் வைரலாகும் வீடியோவை எடுத்த உண்மையான நபர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அத்தகவல் கிடைக்கும்பட்சத்தில் இச்செய்தியில் வருங்காலத்தில் தெரிவிப்போம் என கூறிக்கொள்கின்றோம்.
ராகுல் காந்தியின் பீகார் யாத்திரைக்கு கூடிய கூட்டம் என்று பரவும் வீடியோ தவறானதாகும். அவ்வீடியோ கடந்த ஜூன் மாத்தில் மகாராஷ்டிராவில் நடந்த ரேக்ளா போட்டியில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post by the user, @love_bailgada_sharyat, dated June 23, 2025
Short video post by the user, @warrior003, dated June 23, 2025
Visuals available on Google Street View
Telephonic Conversation with organiser Karlos Pahalwan
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியில் பிரசுரமாகியுள்ளது. அச்செய்தியை இங்கே படிக்கலாம்.
Vijayalakshmi Balasubramaniyan
November 14, 2025
Ramkumar Kaliamurthy
August 27, 2025
Ramkumar Kaliamurthy
August 19, 2025