Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உதவித்தொகை கிடைக்காமல் ஆறு மாதமாக அலையும் மூதாட்டி என்பதாக வெளியாகிய செய்தித்தாள் புகைப்படம் ஒன்றைப் பலரும் தற்போதைய திமுக ஆட்சியின் குறைபாடு என்பதாக சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என்றாரா அமைச்சர் வி.கே.சிங்?
உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கும் மூதாட்டி என்பதாக பரவி வருகின்ற புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அதன்முடிவில், கடந்த 2018 ஆம் ஆண்டே Volunteers for House என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதன் மூலமாக இந்த செய்தி நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பழமையானது என்பது நமக்கு உறுதியானது.
தொடர்ந்து நம்முடைய தேடலில், குறிப்பிட்ட வைரல் பதிவிற்கான விளக்கத்தை தற்போதைய விருதுநகர் ஆட்சியரான மேகநாத் ரெட்டி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விளக்கமளித்துள்ளார் என்பதும் நமக்குத் தெரிய வந்தது. அதில், குறிப்பிட்ட மூதாட்டியின் முதியோர் உதவித்தொகை குறித்து 2021 ஆம் ஆண்டு வெளியான அரசு அறிக்கையையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், வைரலாகும் பதிவு குறித்து திமுக மாணவர் அணித்தலைவரான ராஜீவ் காந்தி, “பழைய பொய் செய்திகளை வெளியிட்டு எப்போதும் தினமலர் தன் நரித்தனத்தை காட்டும் சமீபகாலமாக நீங்கள் அதிகமாக ஏன் தினமலர் பத்திரிக்கை செய்தியை அதிகமா போடுறீங்க அண்ணாத்த????” என்று இரண்டு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அதில், ஒன்று குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இருக்கும் மூதாட்டியின் மகன் வெ.சண்முக கணேசன் என்பவரது வாக்குமூலம் என்பதாக கிராம நிர்வாக அலுவலர் கையொப்பத்துடன் அரசுக்கான கடிதமும், அதனைத் தொடர்ந்து தினமலர் செய்திக்கு மறுப்பு அளிக்கும் விதமாக 2021 ஆம் ஆண்டு, சிவகாசி தனி வட்டாச்சியர் மா. ஆனந்தராஜ் என்பவர் அளித்துள்ள அறிக்கையும் தெளிவாக இணைக்கப்பட்டுள்ளது. மேகநாத் ரெட்டியின் பதிவில் இருந்து எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ள இப்புகைப்படங்களில் தெளிவாக கடந்த 17.07.2018 தேதியிட்ட விருதுநகர் பதிப்பு தினமலரில் வந்த செய்தி இது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்தே 2020, 2021 என்று தொடர்ந்த ஆண்டுகளாக பல்வேறு சமூக வலைத்தளப் பக்கங்களும் இதை ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட இந்த மனுவின் மேல்நடவடிக்கையாக நடைபெற்ற விசாரணையில் அந்த மூதாட்டியின் மகன் அவரைக் கவனித்துக் கொள்வதும், அவருக்கு உதவித் தொகை தேவையில்லை என்பதும் தனி வட்டாச்சியர் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read: இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டாரா?
உதவித்தொகை கிடைக்காமல் ஆறு மாதமாக அலையும் மூதாட்டி என்பதாக வெளியாகிய செய்தித்தாள் புகைப்படம் ஒன்றைப் பலரும் தற்போதைய திமுக ஆட்சியின் குறைபாடு என்பதாக சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்படும் புகைப்படச் செய்தி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post, From Volunteers for HOUSE, Dated July 18, 2018
Twitter Post, From R.Rajiv Gandhi DMK, Dated January 07, 2023
Twitter Post, From Meghanath Reddy, District Collector of Virudhunagar district, Dated January 07, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 1, 2025
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025