Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அதிமுக என்ற பேரியக்கம் இன்று அதன் கொள்கையில் இருந்து விலகி செல்வது மனதை ரணமாக்குகிறது - அன்வர் ராஜா, அதிமுக
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டு பரவுகிறது.
அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்று அதிமுகவைச் சேர்ந்த அன்வர் ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”கொள்கையிலிருந்து விலகுவது ரணமாக்குகிறது.
எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா இருவரும் சிறுபான்மை மக்களின் அரணாக நின்று மதவாதிகளிடம் இருந்து பாதுகாத்தனர்; அப்பேர்ப்பட்ட அதிமுக என்ற பேரியக்கம் இன்று அதன் கொள்கையில் இருந்து விலகி செல்வது மனதை ரணமாக்குகிறது
புரட்சி தலைவி அம்மா அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுபவர்களோடு இனியும் இணைந்து என்னால் பயணிக்க முடியும் என்று தோன்றவில்லை; காலமறிந்து முடிவெடுப்பேன்!
அமித்ஷா EPS சந்திப்பு பற்றிய கேள்விக்கு அன்வர் ராஜா பதில்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகி விடுவேன் என்றாரா ஜெயக்குமார்?
அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்று அதிமுக அன்வர் ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை வெளியிட்டதாக பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால், இவ்வாறு எந்த நியூஸ்கார்டும் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.
எனவே, இந்த நியூஸ்கார்ட் குறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து, அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத்தலைவரான கெளரி சங்கர், “200 ரூபாய்க்காக திமுக கொத்தடிமைகள் பரப்பும் பொய் செய்திகளை நம்பாதீர்!” என்று இந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி படுத்தியுள்ளார்.
Also Read: மதுபானக்கடை போர்டில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் புகைப்படம் என்று பரவும் செய்தி உண்மையா?
அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்று அதிமுக அன்வர் ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, Gowri Shankar D, AIADMK, Dated March 26, 2025
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai Digital, Dated March 26, 2025
Ramkumar Kaliamurthy
May 5, 2025
Ramkumar Kaliamurthy
April 21, 2025
Ramkumar Kaliamurthy
April 16, 2025