Saturday, March 15, 2025
தமிழ்

Fact Check

அண்ணாவின் மாநில சுயாட்சி தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று ஈ.பி.எஸ் கூறினாரா?

banner_image

Claim: அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று – ஈ.பி.எஸ்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook//agilan.nagarajan.5

Facebook Link | Archived Link

அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/Saleem Pondicherry

Archived Link

அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/prabhu.ayyanar.3

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று எடப்பாடி பழனிசாமி  கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இவ்வாறு அவர் தெரிவிக்கவே இல்லை” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது ஏபிபி நாடின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள 12/07/2023 அன்று  ‘மாநில சுயாட்சி, திராவிட மாடல் போன்ற உருட்டுகள் எதற்கு? – என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்றை ஏபிபி நாடு வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஏபிபி நாடும் வைராலும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று தெளிவு செய்து பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய குடியரசுத் தலைவருக்கு சமீபத்தில் கடிதம் ஒன்று எழுதினார். இக்கடிதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என்று குறிப்பிட்டதாக கூறி, அதற்கு கண்டன அறிக்கை ஒன்றை அதிமுகவின் பொது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இந்த அறிக்கை குறித்தே ஏபிபி நாடு செய்தி வெளியிட்டிருந்தது. கூடவே இதுக்குறித்து நியூஸ்கார்டும் வெளியிட்டிருந்தது. அந்த நியூஸ்கார்டே எடிட் செய்யப்பட்டு அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரப்பப்பட்டு வருகின்றது.

Also Read: இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனரா?

Conclusion

அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from ABP Nadu, Dated July 12, 2023

Tweet from ABP Nadu, Dated July 13, 2023
Phone Conversation with Kovai Sathyan, Spokes Person, AIADMK
Report from ABP Nadu, Dated July 12, 2023
Report from BBC, Dated July 09, 2023
Tweet from AIADMK, Dated July 12, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.