Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: சில்லறைகள் பற்றி கவலையில்லை என்று அண்ணாமலை கூறினார்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அப்பேட்டியில், 1991-96 காலகட்டமானது ஊழலில் மிகவும் மோசமாக இருந்தது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டில் பல நிர்வாகங்கள் ஊழல் நிரிவாகங்களாக இருந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் கூட நீதிமன்ற சட்டங்களின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் தமிழ்நாடு அதிக ஊழல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு ஊழலில் முதலிடம் வகிக்கின்றது என்று பதிலளித்தார்.
அண்ணாமலையின் இந்த பதிலானது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு எதிராக ஊடகங்களில் ஆவேசமாக பேசியுள்ளனர்.
இந்நிலையில்“எடப்பாடியாருக்கும் எனக்கும் கட்சி மற்றும் கொள்கைள் தாண்டிய ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. அவர் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு. அதிமுகவில் இருக்கும் மற்ற சில்லறைகள் பற்றிய கவலை எனக்கில்லை” என்று அண்ணாமலை கூறியதாகநியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?
சில்லறைகள் பற்றி கவலையில்லை என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அந்த நியூஸ்கார்ட் போலியானது என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில் அத்தகவல் பொய்யானது என்று அவர் தெளிவு செய்தார்.
சில்லறைகள் பற்றி கவலையில்லை என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Phone Conversation with S.G.Surya, State Secretary, BJP, Dated June 13, 2023
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai, Dated June 13, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 17, 2025
Ramkumar Kaliamurthy
July 17, 2025
Vijayalakshmi Balasubramaniyan
July 16, 2025